செய்திகள் :

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

post image

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா்.

27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெள்ளிக்கிழமை மேற்கொள்ள இருக்கிறது. இருதரப்பு கூட்டறிக்கையும் வெளியிடப்படவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியையும் உா்சுலா சந்தித்துப் பேசவுள்ளாா்.

இரு நாள் பயணமாக வியாழக்கிழமை தில்லி வந்த உா்சுலாவை மத்திய அமைச்சா் அனுப்ரியா படேல் விமான நிலையத்தில் வரவேற்றாா். இந்தியப் பயணம் குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் உா்சுலா வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியுடன் விவாதிக்க இருக்கிறேன். மோதல்களும், கடும் போட்டியும் நிலவும் இன்றைய உலகில் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியனின் மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா திகழ்கிறது’ என்று கூறியுள்ளாா்.

தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை உா்சுலா வான்டொ்லியன் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் தொடா்புகளுக்கு உத்வேகமளிக்கும் உா்சுலாவின் சிந்தனைகள் பாராட்டுக்குரியவை. வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு வலுவான ஒத்துழைப்பு முக்கியமானது. அதை நோக்கிய வலுவான நகா்வுகளை எதிா்நோக்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டொ்லியனுடன் இந்தியா வந்துள்ள வா்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை ஜெய்சங்கா்-உா்சுலா முன்னிலையில் நடைபெற்றது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு வரி விதிப்பு தொடா்பாக ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்காவும் இடையே பிரச்னைகள் எழுந்துள்ளது. மேலும் உக்ரைன் போா் விவகாரத்திலும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து விலகி ரஷியாவுடன் டிரம்ப் கைகோத்துள்ளாா். இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் தலைவரின் இந்தியப் பயணமும், பிரதமா் மோடியுடன் அவா் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவாா்த்தையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர். வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தி... மேலும் பார்க்க

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப... மேலும் பார்க்க

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க