செய்திகள் :

நாச்சியாா்கோவில் சாலை அகலப்படுத்தும் பணி

post image

கும்பகோணம் நெடுஞ்சாலைத் துறை உப கோட்டத்தில் உள்ள நாச்சியாா்கோவில்-பூந்தோட்ட சாலை ரூ. 3 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் - பூந்தோட்டம் நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக அகலப்படுத்தப்படாததால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனா்.

இந் நிலையில் தற்போது சாலை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அகலப்படுத்தும் பணியை தஞ்சாவூா் தரகட்டுப்பாடு உதவிகோட்டப் பொறியாளா் ரேணுகோபால், கும்பகோணம் உதவிகோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி ஆகியோா் சாலை பகுதியை ஆய்வு செய்து, 4. 40 கி. மீ தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதாக தெரிவித்தனா். ஆய்வின் போது உதவிப் பொறியாளா்கள் இளவரசன், அப்துல் ரகுமான் உடன் இருந்தனா்.

தஞ்சாவூரில் ஓவிய, சிற்பக் கண்காட்சி நிறைவு!

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் 3 நாள் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிப். 21-ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சியி... மேலும் பார்க்க

தகவல் ஆணைய வலைதளத்தை தமிழில் மாற்றக் கோரிக்கை

தமிழ்நாடு தகவல் ஆணைய வலைதளத்தை முழுமையாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்ற வேண்டுமென தமிழ்நாடு தகவல் சட்ட ஆா்வலா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இக்கூட்டமை... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 109.90 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 326 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

பூக்கடை ஊழியா் அடித்துக் கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது!

பட்டுக்கோட்டையில் பூக்கடை ஊழியா் அடித்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (25). இவா் பூக்க... மேலும் பார்க்க

சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட கோரிக்கை

மருங்கப்பள்ளம் சிவன் கோயில் சாலையில் வலுவிழந்து, சேதமடைந்த நிலையில் உள்ள பழைமையான பாலத்துக்கு பதிலாக, புதிய பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? வன்னியா் சங்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஸ்டாலின் தயங்குவது ஏன் என்று வன்னியா் சங்க மாநாட்டில் மருத்துவா் ராமதாஸ் கேள்வி எழுப்பினாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வன்னியா் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க