செய்திகள் :

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியராக இருந்த ரஜ்னீஷ், மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அடையாளம் தெரிவிக்க விரும்பாத நபர் மூலம் காவல்நிலையத்துக்குப் புகார் வந்தது.

இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில், ஏராளமான பெண்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், காவல்நிலையத்துக்கும், மகளிர் ஆணையத்துக்கும் பேராசிரியர் மீது புகார்களை அளிக்கத் தொடங்கினர்.

அடையாளம் தெரியாமல் புகார் அளித்திருப்பவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து, பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புகார்கள் வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தத் தொடங்கிய நிலையில், பேராசிரியர் தலைமறைவானார். அவரைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.

கடந்த வாரம், காவல்துறைக்கும், மகளிர் ஆணையத்துக்கும் வந்த புகார் கடிதத்தில், முதலில், மாணவிகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை பாலியல் துன்புறுத்தி அதனை விடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதை தொடர்ந்து செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்லூரியில் இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில், மாணவிகளை தயவு செய்து காப்பாற்றுங்கள். சமூகத்துக்குப் பயந்து அவர்கள் எதையும் வெளியே சொல்வதில்லை. இந்த கொடூர நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னைப் போன்ற பெண்களுக்கு நீதி வழங்குங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், அந்த பேராசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் சில புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார். இளம் பெண்களுடன் பேராசிரியர் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

'தொகுதி மறுசீரமைப்பு செய்தால் எங்கள் குரல் நசுக்கப்படும்' - திருச்சி சிவா பேட்டி

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு, தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்... மேலும் பார்க்க

ரன்யா ராவ் பற்றி இழிவான கருத்து: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ர... மேலும் பார்க்க

விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம்,... மேலும் பார்க்க

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க