செய்திகள் :

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

post image

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது ஜம்மு-காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் கார்கே என்ன மாதிரியான கருத்துகளைக் கூறுகிறார்? ஒருபுறம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாட்டுக்குத் துணை நிற்பதாக அவர் கூறுகிறார். மறுபுறம், நாட்டை பலவீனப்படுத்த அவர் முயற்சிக்கிறார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவரிடம் இருந்து இதைவிட பெரிய பொறுப்பற்ற கருத்து வெளிவந்திருக்க முடியாது.

நாடு தழுவிய போர் ஒத்திகைக்கு அரசு தயாராகி வரும் வேளையில், மக்கள் நாட்டுக்கு துணை நிற்கின்றனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ள கருத்து வலி நிறைந்ததாகவும், துரதிருஷ்டவசமானதாகவும் உள்ளது.

கார்கே தனது கட்சித் தலைவர்களிடம் பொறுப்பாகச் செயல்படுவதற்கான அவசியம் குறித்து வலியுறுத்தி இருந்திருக்க வேண்டும். மாறாக, தேசப் பாதுகாப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வரும் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தில் அவரும் இணைந்துள்ளார் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி கூறியதாவது:

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வியை முன்வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் விமர்சித்திருப்பது பாதுகாப்புப் படையினரின் மனவலிமையைக் குறைப்பதற்கான முயற்சியாகும். பயங்கரவாதத்துக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான போராட்டம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கார்கேவின் கருத்து அவசியமற்றதாகும் என்றார் அவர்.

சோஃபியா குரேஷி, வியோமிகா சிங்: யார் இவர்கள்?

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

இந்தியா முழுவதும் சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூடியது இந்தியா!

இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்கள... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க