செய்திகள் :

நீலகிரி: விண்ணதிர முழங்கிய பழங்குடி இசைக்கருவிகள்; மக்கள் வெள்ளத்தில் அருள்பாலித்த பொக்காபுரத்தாள்!

post image

மலை மாவட்டமான நீலகிரியில் அமையப்பெற்றுள்ள வன தெய்வ கோயில்களில் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது பொக்காபுரம் மாரியம்மன் கோயில். இயற்கை எழில் கொஞ்சும் அடர் வனமான முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் இந்த அம்மன் கோயிலில் உள்ளூர் பழங்குடி மக்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

தேர் பவனி

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர் திருவிழாவைக் காண கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் திரள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. கரக ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் மிக முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்றிரவு தொடங்கியது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தேர் பவனியைத் தொடங்கி வைத்தார்.

பழங்குடி மக்களின் பாரம்பர்ய இசைக்கருவிகள் முழங்க நடன ஆரவாரத்துடன் பக்தர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சிம்ம வாகனத்தில் நீலப்பட்டுடுத்தி அருள்பாலித்த பொக்காபுரம் அம்மனை விடிய விடிய ஆராதித்து கோயிலைச் சென்றடையச் செய்தனர். வழி நெடுகிலும் உப்பையும் பூக்களையும் தூவி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர்

தேர் திருவிழா குறித்து பகிர்ந்த பக்தர்கள், "கடந்த 7 - ம் தேதி கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜையுடன் திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கங்கை பூஜையும்‌ நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு கரகம் ஏந்தி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. மிக முக்கிய நிகழ்வான அம்மன் தேர் பவனி நேற்றிரவு தொடங்கியது. பழங்குடி மக்களின் பாரம்பர்ய இசைக்கருவிகள் விண்ணதிர ஒளி வெள்ளத்தில் அருள்பாலித்தாள் எங்கள் பொக்காபுரத்தாள்" என்றனர்.

லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு! | Album

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மேலும் பார்க்க

ஆற்றுகால் பகவதி கோயில் பொங்காலை விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு!

பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பை திருடியதாக பொய்யாக திருட்டுப் பட்டம் சூட்டி கோவலன் கொலைசெய்யப்பட்டார். அநீதி இழைத்து தன் கணவனை கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தே... மேலும் பார்க்க

`நோய் நீங்கும், வியாபாரம் பெருகும்'- பவானியில் விமர்சையாக நடைபெற்ற சேறு பூசும் திருவிழா!

ஈரோடு மாவட்டம், பவானியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா... மேலும் பார்க்க

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டம்! - பரவசத்தில் பக்தர்கள்

காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதிக்கு முதல் மரியாதையாக பரிவட்டம் கட்டப்பட்டதுகோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட... மேலும் பார்க்க

ஊட்டி: மசூதி திறப்பு விழாவிற்கு முருகன் கோயில் சார்பாகச் சீர்வரிசை... நெகிழ வைத்த பந்தலூர் மக்கள்!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகில் உள்ள உப்பட்டி பகுதியில் அமைந்திருக்கிறது ஜும்மா மசூதி. நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத் தலமாக இருக்கும் அந்த மசூதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதர்‌ கோயிலில் முறைகேடு; கூடுதல் ஆணையர் நடத்திய ஆய்வால் பரபரப்பு; பின்னணி என்ன?

தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் உடனுறை உலகம்மன் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காகத்... மேலும் பார்க்க