செய்திகள் :

பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!

post image

பாகிஸ்தானுடனான அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாகிஸ்தானிய பெண்ணை ஆன்லைனிலேயே பாஜக கவுன்சிலரின் மகன் திருமணம் செய்தார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித் என்பவரது மகன் முகமது அப்பாஸ் ஹைதருக்கும், பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த ஆண்ட்லீப் ஜஹ்ரா என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக, இரு நாட்டின் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களால் ஜஹ்ராவுக்கு விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஜஹ்ராவின் தாயாரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜஹ்ரா இந்தியாவுக்கு வருவது என்பது இயலாத காரியம் ஆனது. இருப்பினும், ஹைதருக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற ஷாஹித்தின் நிலைப்பாட்டால், ஆன்லைனிலேயே திருமணத்தை நடத்தி விடலாம் என்று கூறினர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

இதனையடுத்து, ஜஹ்ராவின் குடும்பத்தினரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு வீட்டினரும் குழுமி, இந்த ஆன்லைன் திருமண விழாவை நடத்தி வைத்தனர்.

இந்த திருமண விழாவில் பாஜகவின் எம்.எல்.சி.யான பிரிஜேஷ் சிங் பிரிஷு உள்பட பலரும் கலந்து கொண்டனர். ஜஹ்ராவுக்கு விரைவில் விசா கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஹைதர், ஆன்லைனிலேயே அவரை நிக்காஹ் செய்தார்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூ... மேலும் பார்க்க

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள... மேலும் பார்க்க

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்... மேலும் பார்க்க

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையின... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க