செய்திகள் :

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன்!

post image

நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளாக போட்டி நடைபெற்று வருகிறது.

இதற்கு முந்தைய இரு வாரங்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று ரவீந்தரும், அர்ணவும் வெளியேறிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

இதையும் படிக்க: ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்ட அமரன்..! குவியும் வாழ்த்து!

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, செளந்தர்யா, தர்ஷா குப்தா, சத்யா, முத்துக்குமரன், அருண் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேறுவார்.

மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தற்போதைய நிலவரப்படி தர்ஷா குப்தா அல்லது அன்ஷிதா பின்தங்கிவுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் புரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயனை நடிகர் தீபக் ஆரத்தழுவி வரவேற்றார்.

பின்னர், அமரன் படத்தின் டிரைலர் போட்டியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் சிறிதுநேரம் அனைவரிடம் கலகலப்பாக பேசிவிட்டு, பிக் பாஸ் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.வனத்துறை அமைச்சர் க. பொன்முடியின் “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீட்டு ... மேலும் பார்க்க

மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை: சு. வெங்கடேசன்

மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை பெய்துள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:மதுரையில... மேலும் பார்க்க

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு... 35 மாணவர்கள் மயக்கம்!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் சுமார் 35-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ... மேலும் பார்க்க

மிஸ்டர் மனைவி தொடரில் மாற்றப்பட்ட பிரபல நடிகை!

மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஸ்மிருதி விலகியுள்ளார்.சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வேலைக்குச் சென்று சுதந்திரமாக... மேலும் பார்க்க

தொடர் மழையால் செந்நிறமாக மாறிய காவிரி!

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் வரும் நீர் செந்நிறமாக மாறியுள்ளது.கர்நாடகா ம... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிமுக முன்னாள் அம... மேலும் பார்க்க