செய்திகள் :

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!

post image

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.

பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியாவிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு வரும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியாவின் உள்துறைப் பாதுகாப்பு குறித்து நடத்தப்படும் சர்வதேச கண்காட்சியான மிலிபோல்-ன் (MILIPOL) இரண்டாவது பதிப்பை இந்திய உள்துறை இணையமைச்சர் நித்யாந்த் ராய் உடன் இணைந்து துவக்கி வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள தேசிய காவல் துறை நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்.

பின்னர், மிலிபோல் நிகழ்ச்சியில் பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் ஆகியவற்றைத் தடுக்க இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்தப் பயணத்தில், தேசிய பாதுகாப்பு காவலர் தலைமைச் செயலகத்திற்கு செல்லும் அவர், அங்கு வீரர்களால் நடத்தப்படும் சிறப்பு ஒத்திகையைக் காணவுள்ளதாகவும் தேசிய வெடிகுண்டு தகவல் மையத்தை சுற்றிப்பார்க்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

செல்போன் பறிமுதல் செய்த ஆசிரியரைத் தாக்கிய மாணவி!

ஆந்திரத்தில் செல்போனைப் பறிமுதல் செய்த பெண் ஆசிரியரை மாணவி ஒருவர் தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விசாகப்பட்டிண மாவட்டத்தில் பீமுனிப்பட்டிணம் பகுதியிலுள்ள தனியார் பொறியியல... மேலும் பார்க்க

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா!

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்னையில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு நேற்று (ஏப்.21) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுக... மேலும் பார்க்க

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக ஏப். 25-ல் இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறி... மேலும் பார்க்க

ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மரியாதை செலுத்தினார். தொழில் சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ர... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதிய உயர்வு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப... மேலும் பார்க்க