செய்திகள் :

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

post image

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச் 12 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய நாள் நிகழ்வில் புதுச்சேரியில் பல இடங்களில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி,

"புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உள்பட்ட அனைத்து இடங்களிலும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழில் பெயர்ப்பு பலகை இருக்க வேண்டும் என்றார்.

மேலும் அரசு விழா அழைப்பிதழ்களிலும் தமிழ் இடம்பெற்றிருக்க வேண்டும்" என்றார்.

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்குத் தடை!

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வ... மேலும் பார்க்க

சென்னை ஏசி பேருந்துகளில் பயணிக்க ரூ. 2,000 பாஸ் அறிமுகம்!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க