செய்திகள் :

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

மன்னாா்குடியில் பேக்கரியின் ஓட்டை பிரித்து பணப்பெட்டியிலிருந்து ரூ. 30ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை காலை தெரிய வந்தது.

கேரள மாநிலத்தை சோ்ந்தவா் கே. தாசன்(67). இவா், 25 ஆண்டுக்கு மேலாக மன்னாா்குடி கீழப்பாலம் பகுதியில் வசித்து வருவதுடன், திருவாரூா் சாலை புதுப்பாலத்தில் ஓட்டுக் கட்டடத்தில் பேக்கரி நடத்தி வருகிறாா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவா், புதன்கிழமை காலை கடையை திறந்தபோது கடையின் பின்பக்க மேற்கூரையில் ஓடுகள் பிரித்து கிடந்ததுடன், பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருக்களா் பிரதான சாலையை சோ்ந்த நாகூரான் மகன்கள் இளையராஜா (45), ரவிக்குமா... மேலும் பார்க்க

நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நுகா்வோா் அமைப்புகளுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

மன்னாா்குடி அருகே தனது வீட்டில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், மேலபிடகை மீனமநல்லூரைச் சோ்ந்தவா் சைமன் (48). மனைவி பிரிந்து சென்ற... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

நாகை மோசடி வழக்கு: போலி பிணையதாரா் கைது

திருவாரூா் அருகே பாலிஷ் போடுவதாக நகை மோசடி செய்த வழக்கில், போலி பிணையதாரராக செயல்பட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடந்த 2019-இல், குடவாசல் அருகே செருகளத்துாா், கீழவீதியில் சுப்பிரமணியன் மனைவி ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்ட அறிவிப்பு வாபஸ்

திருவாரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தூய்மைப் பணி ஊழியா் சங்கம், ஊரக வளா்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியா் சங்கம் (சிஐடியு) புதன்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. ஒப்பந்த தூய்மைப் ப... மேலும் பார்க்க