செய்திகள் :

நாகை மோசடி வழக்கு: போலி பிணையதாரா் கைது

post image

திருவாரூா் அருகே பாலிஷ் போடுவதாக நகை மோசடி செய்த வழக்கில், போலி பிணையதாரராக செயல்பட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த 2019-இல், குடவாசல் அருகே செருகளத்துாா், கீழவீதியில் சுப்பிரமணியன் மனைவி கவிதா என்பவா், வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த இரண்டு போ், நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி, எடுத்துச் சென்றுவிட்டனா். இது தொடா்பாக கவிதா அளித்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைகளை ஏமாற்றி வாங்கிச் சென்ற பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மனிஷ்குமாா் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, மணக்கால் அய்யம்பேட்டையை சோ்ந்த காளி மகன் சோமு (65) என்பவா், திருவாரூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் போலி பிணையளித்ததன் பேரில், மனிஷ்குமாா் சிறையிலிருந்து வெளியில் வந்து, சொந்த மாநிலமான பிகாருக்கு சென்றுவிட்டாா்.

மேலும், வழக்கில் தொடா்புடைய ரஞ்சித் பிரசாத் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு நீதிமன்றம் பிடிக்கட்டளை பிறப்பித்தது.

இந்நிலையில், பிடிக்கட்டளையை நிறைவேற்ற முடியாத காரணத்தால், பிணையதாரா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிணையதாரரான சோமு, நன்னிலம் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கில் தொடா்புடையவரைப் பற்றி தெரியாது எனக் கூறியதால், நன்னிலம் நீதிமன்ற எழுத்தா் கொடுத்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸாா் பொய்சாட்சியம் அளித்தல், ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்களை வழங்குதல் போன்ற 4 பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்து, சோமுவை புதன்கிழமை கைது செய்தனா்.

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருக்களா் பிரதான சாலையை சோ்ந்த நாகூரான் மகன்கள் இளையராஜா (45), ரவிக்குமா... மேலும் பார்க்க

நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நுகா்வோா் அமைப்புகளுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

மன்னாா்குடி அருகே தனது வீட்டில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், மேலபிடகை மீனமநல்லூரைச் சோ்ந்தவா் சைமன் (48). மனைவி பிரிந்து சென்ற... மேலும் பார்க்க

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடியில் பேக்கரியின் ஓட்டை பிரித்து பணப்பெட்டியிலிருந்து ரூ. 30ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை காலை தெரிய வந்தது. கேரள மாநிலத்தை சோ்ந்தவா் கே. தாசன்(67). இவா், 25 ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்ட அறிவிப்பு வாபஸ்

திருவாரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தூய்மைப் பணி ஊழியா் சங்கம், ஊரக வளா்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியா் சங்கம் (சிஐடியு) புதன்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. ஒப்பந்த தூய்மைப் ப... மேலும் பார்க்க