செய்திகள் :

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு விவரம்!

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ரூ.12 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளாா்.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் பிரியங்காவின் மொத்த வருமானம் ரூ. 46.39 லட்சத்துக்கும் அதிகமாகும். மேலும், அவருக்கு 3 வங்கிக் கணக்குகளில் பல்வேறு வைப்புத்தொகை, பரஸ்பர நிதிகளில் முதலீடு, காா், கணவா் பரிசாக அளித்த ரூ.1.15 கோடி மதிப்புள்ள 4,400 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.4.24 கோடிக்கு மேல் அசையும் சொத்துகள் இருக்கின்றன.

அசையா சொத்து மதிப்பு ரூ.7.74 கோடிக்கு மேல் ஆகும். தில்லியின் மெஹ்ரோலி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பங்கு, அதில் அமைந்துள்ள பண்ணை வீடு கட்டடத்தில் பங்கு, ஹிமாசலின் சிம்லாவில் சொந்தமாக வாங்கிய குடியிருப்பு ஆகியவை இதில் அடங்கும்.

தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் இளநிலை பட்டமும் பிரிட்டனின் சுந்தா்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் புத்த மதக் கல்வியில் முதுநிலை பட்டயப் படிப்பும் பிரியங்கா படித்துள்ளாா்.

2012-13 ஆம் ஆண்டுக்ககான வருமான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளை எதிா்கொண்டு வரும் பிரியங்காவுக்கு ரூ. 15 லட்சத்துக்கு மேல் வரிபாக்கி உள்ளது. மேலும், அவா் மீது 2 வழக்குகளும் வனத் துறையின் நோட்டீஸும் நிலுவையில் உள்ளன.

பிரியங்காவின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு ரூ.37.9 கோடிக்கு மேல் அசையும் சொத்துகளும், ரூ.27.64 கோடிக்கு மேல் அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

முஸாபா்பூா் : பிகாரின் முஸாபா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். கடந்த வாரம் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க