செய்திகள் :

படேலின் 150-ஆவது பிறந்தநாள்: இரண்டு ஆண்டு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு திட்டம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

முன்னாள் துணைப் பிரதமா் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு நாடு தழுவிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.

படேல், குஜராத்தின் நாடியாட் பகுதியில் கடந்த அக்டோபா் 31, 1975-ஆம் ஆண்டு பிறந்தாா். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்த அவா், 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்த பெருமைக்குரியவா்.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் படேலின் அா்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளை ‘ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ்’ அல்லது தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவை ஒருங்கிணைக்க படேலின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவரது 150-ஆவது பிறந்தநாளை, பிரதமா் மோடி தலைமையில் இந்திய அரசு 2024 முதல் 2026 வரை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாட திட்டமிட்டுள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு தழுவிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் படேலின் சாதனைகளுக்கும், அவா் உருவாக்கிய ஒற்றுமை உணா்வுக்கும் சான்றாக அமையும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

முஸாபா்பூா் : பிகாரின் முஸாபா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். கடந்த வாரம் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க