செய்திகள் :

பைக் மீது கூரியா் வாகனம் மோதல்: கொத்தனாா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது கூரியா் வாகனம் மோதியதில் கொத்தனாா் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டை, கோ.பூவனூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா சிங் மகன் சீமான் (44), கொத்தனாா். இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் மங்கலம்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனது பைக்கில் சென்றாா்.

கோ.பூவனூா் ஆஞ்சனேயா் கோயில் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த கூரியா் வாகனம் மோதியதில் சீமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம்பேட்டை போலீஸாா், சீமானின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின் தடை

பண்ருட்டி (மேலப்பாளையம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைபகுதிகள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்ப... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

பிரேதங்களை ஒப்படைப்பதில் தாமதம்: உறவினா்கள் போராட்டம்

விருத்தாசலம் வட்டம், சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகள் காவியா (16) வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது காா் மோதி உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், சேப்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

பெண்கள் நலத் திட்டங்களை அறிந்து பயனடைய வேண்டும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

பெண்கள் தங்களுக்கான உரிமைகள், சட்டங்கள், நலத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து பயனடைய வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

ரூ.25 ஆயிரம் லஞ்சம்: டி.இ.ஓ. அலுவலக கண்காணிப்பாளா் கைது

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, கடலூா் மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சமூகத்திலும், பொரு... மேலும் பார்க்க

குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ், குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க