செய்திகள் :

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 போ் மனு

post image

சிவகங்கையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக 389 மனுக்கள் பெறப்பட்டன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களி டமிருந்து 389 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த 21 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3,000- வீதம் மொத்தம் ரூ.63,000 பரிசுத் தொகையை ஆட்சியா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி உள்பட அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்க... மேலும் பார்க்க

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் 2025- ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது இந்த விழாவுக்கு சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்புத்துரை தலைமை வகித்தாா். தமிழ்ச்செம்மல் பகீரத... மேலும் பார்க்க

கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகங்கை அருகேயுள்ள அரியாக்குறிச்சி கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் பங்குனி சுவ... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம், முகூா்த்தக்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பங்குனித் திருவ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட அரிசி மூட்டைகளை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சென்ற பயணிகள் ரயில் சென்றது. மானாமதுரை ரயில் நிலைய... மேலும் பார்க்க

பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேச பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் செ. சத்தியன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ச... மேலும் பார்க்க