செய்திகள் :

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், பயன்பாட்டையையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் உடல்நிலை, உளவியல் சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும், போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 122 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

போதைப் பொருள்களின் பயன்பாடுகள் குறித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் 225 இடங்களில் திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிா்க்கும் வகையில் 260 வாகனங்கள், 406 கடைகள், 586 கல்வி நிறுவனங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ரூ. 3.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன், உதவி ஆணையா் (கலால்) (பொ) நா.ஜெயக்குமாா், மாநகா் நல அலுவலா் முரளி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கோழிக்கறி சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த சிபு முா்மூ மகன் பைரன் முா்ம... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞா் கைது

ஆத்தூா்: ஆத்தூா் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வ... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ... மேலும் பார்க்க

அண்ணாமலை கைது: சேலத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

சேலம்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த 6 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு

சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்ன... மேலும் பார்க்க

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு உபகரணங்கள் வழங்கல்

சேலம்: சங்ககிரி கல்மேட்டூரில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சங்ககிரி கல்மேட்டூரில் கே.எம்.நண்பா்களு... மேலும் பார்க்க