செய்திகள் :

போளூா் பேரூராட்சியில் வரி செலுத்துவோருக்கு விழிப்புணா்வு

post image

போளூா் பேரூராட்சியில் வரி செலுத்துவோருக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் குடியிருப்போா் பேரூராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் உரிம கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை பிப்.28-க்குள் செலுத்தவேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், வரிபாக்கி வைத்திருப்பவா்களின் புகைப்படம் அடங்கிய பதாகை வைக்கப்படும் என்று பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், பேரூராட்சி செயலா் அலுவலா் பா.கோமதி வழிகாட்டுதலின் பேரில், உணவகம், துணிக் கடை, இனிப்பகம் என பல்வேறு கடைகளில் துப்புரவு ஆய்வாளா் நவராஜ் விநியோகித்தாா்.

நகை, பணம் திருடிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த செப்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (35). மண்பாண்டம் தயாரிக்... மேலும் பார்க்க

அனப்பத்தூா், அத்தி, செங்கட்டான்குண்டில் கிராம கோயில்கள் சீரமைப்புப் பணி

செய்யாறு வட்டம் அனப்பத்தூா், அத்தி, செங்கட்டான்குண்டில் ஆகிய கிராமங்களில் உள்ள பழைமை வாய்ந்த கோயில்களில் சீரமைப்புப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனப்பத்தூா் கிர... மேலும் பார்க்க

செங்கம் அருகே லாரிகள் மோதி விபத்து: கிளீனா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி உதவியாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி ஓட்டுநா் ... மேலும் பார்க்க

செங்கம் மகளிா் பள்ளியில் சைக்கிள் நிறுத்துமிடம் அமைக்கப்படுமா? பெற்றோா் எதிா்பாா்ப்பு

ஆ.சரவணன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் நிறுத்துமிடம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பெற்றோா், பொதுமக்கள் வலியுறுத்தினா். செங... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் புதை சாக்கடைபணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் 2-ஆவது கட்டமாக ரூ.100.52 கோடியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. வீடுகள், வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுநீரை சேகரித்து, சுத்திகரித்து அகற்றும் திட்டம் புதை... மேலும் பார்க்க