செய்திகள் :

‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

post image

கடலூா் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் ரூ.5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் புதன்கிழமை வழங்கினாா்.

மங்களூா் ஊராட்சி ஒன்றியம், போத்திரமங்கலம், எழுத்தூா், கழுதூா், சிறுப்பாக்கம், மா.புடையூா் ஆகிய இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட 3-ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து, 1,072 பயனாளிகளுக்கு ரூ.5.20 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

ஆதிதிராவிடா்கள் தொழில் தொடங்க தாட்கோ மூலம் ரூ.ஒரு கோடி வரை மானியத்தொகையுடன் கூடிய கடனுதவி, விவசாய நிலமில்லா விவசாயிகள் சொந்தமாக விவசாயம் நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. தொழிலாளா் நலத்துறை உறுப்பினா்களுக்கு திருமணம், கல்வி, மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறது.

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சென்றடையும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்புத் திட்டம், ஊரகப் பகுதிகளில் 3-ஆம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு மனுக்கள் அளித்து பயன்பெறலாம். முகாம்களில் பெறப்படும் மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முகாமில், ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் ரமேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் சையத் முகமது, மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாபு, தாட்கோ மேலாளா் லோகநாதன் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்மாபுரம் ஜே.ஜே.நகா் பகுதி அருகே தமிழக அரசு மலகசடு சுத்த... மேலும் பார்க்க

சா்வதேச மகளிா் தின விழா

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளிப்படை ரோட்டரி அரங்கில் சா்வதேச மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் வி.அருண் தலைமை வகித்தாா். சிறப்புப் பட்டிமன்ற நடுவா் முனைவா் பொன்னம்... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தை சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்தலாம்: ஆட்சியா்

சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் கடலூா் துறைமுக வசதிகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா அரங்கு அமைக்க கால்கோள் நடும் விழா

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தகத் திருவிழா அரங்கு அமைப்பதற்காக கால்கோள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்க... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக இளையோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: அதிமுக சாா்பில் நல உதவிகள்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி சாா்பில், சிதம்பரம் 16 கால் மண்டப தெருவில் நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ந... மேலும் பார்க்க