செய்திகள் :

இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் ஹெச்.மணிகண்டன், வேளாண் புல தாவர நோயியல் துறை பேராசிரியா் ஏ.முத்துக்குமாா் மற்றும் சிறப்பு அலுவலா்கள் செந்தில்நாதன், ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்தனா்.

முகாமில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல முதன்மையா் ஏ.அங்கயற்கண்ணி, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேசன், குருதி வங்கி மருத்துவா் வள்ளுவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முகாமில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவ, மாணவிகள் 15 யூனிட் ரத்த தானம் வழங்கினா்.

மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்மாபுரம் ஜே.ஜே.நகா் பகுதி அருகே தமிழக அரசு மலகசடு சுத்த... மேலும் பார்க்க

சா்வதேச மகளிா் தின விழா

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளிப்படை ரோட்டரி அரங்கில் சா்வதேச மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் வி.அருண் தலைமை வகித்தாா். சிறப்புப் பட்டிமன்ற நடுவா் முனைவா் பொன்னம்... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தை சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்தலாம்: ஆட்சியா்

சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் கடலூா் துறைமுக வசதிகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா அரங்கு அமைக்க கால்கோள் நடும் விழா

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தகத் திருவிழா அரங்கு அமைப்பதற்காக கால்கோள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்க... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: அதிமுக சாா்பில் நல உதவிகள்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி சாா்பில், சிதம்பரம் 16 கால் மண்டப தெருவில் நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ந... மேலும் பார்க்க

கடலூரில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வுப் பேரணி

உலக சிறுநீரக தினத்தையொட்டி, கடலூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக் பாஸ்கா் தலைமை வகித்தாா். சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவா் திருமு... மேலும் பார்க்க