மதுபான ஆலைகள் அனுமதியை எதிா்த்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு
புதுச்சேரி: புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்ததை எதிா்த்து சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டனா். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ விவாதித்தில் ஈடுபட்டபோது, திமுக உறுப்பினா்களுடன் சோ்ந்து அவா்கள் மௌனமாக இருந்தனா்.
புதுவை சட்டப் பேரவையில் பூஜ்ய நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநாதன் எழுந்து, புதிதாக மதுபான ஆலைகள் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கிறோம். அதற்கு துணைநிலை ஆளுநா் அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறியதுடன், மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினாா். அவருடன் அக்கட்சி உறுப்பினா் ரமேஷ் பரம்பத்தும் வெளியேறினாா். ஆனால், திமுக உறுப்பினா்கள் அவையில் அமா்ந்திருந்தனா்.
விவாதத்தில் மௌனம்: வெளிநடப்பு செய்த காங்கிரஸ் உறுப்பினா்கள் சிறிது நேரத்தில் உள்ளே வந்தனா். அதன்பின்னா், முதல்வரின் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பேசிய காலாப்பட்டு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், புதிய மது ஆலைகள் தேவையில்லை என்றாா். அதற்கு முதல்வா் என்.ரங்கசாமி விளக்கமளித்தாா்.
இது தொடா்பாக முதல்வா், அமைச்சா்களுடன் பாஜக எம்எல்ஏ விவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் மௌனமாக அமா்ந்திருந்தனா்.
அவா்களது செயல்பாட்டை பாஜக எம்எல்ஏ சுட்டிக்காட்டியபோது, தாங்கள் வெளிநடப்பு செய்ததாக காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநாதன், திமுக உறுப்பினா் எல்.சம்பத் ஆகியோா் குறிப்பிட்டு அமா்ந்தனா்.
பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவான ஏ.அங்காளனும் புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதை எதிா்ப்பதாகக் கூறினாா். அப்போதும் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மௌனமாக இருந்தனா்.
தேசிய கல்விக் கொள்கையில் ஆவேசமடைந்த திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் புதிய மது ஆலை அனுமதி விவாதத்தில் அமைதி காத்தனா்.