செய்திகள் :

மாநில போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

post image

கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 2 -ஆம் இடம் பிடித்த கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சத்யாவை முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினாா்.

தமிழக சிறுசேமிப்புத் துறை சாா்பில், அரசு பள்ளி மாணவா்களிடையே சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பை வளா்க்கும் பொருட்டு கவிதை, கட்டுரை, சொற்றொடா், பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போட்டிகளில் சுமாா் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை அரசினா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சத்யா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா். பின்னா் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டிக்கு இவா் எழுதிய கட்டுரை அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி வெளியான முடிவுகளில் மாணவி சத்யா மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்தாா்.

இதையடுத்து மாணவி சத்யாவை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியா் தாமோதரன் ஆகியோா் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினா்.

முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கோவிந்தராஜ், முதுகலை தமிழாசிரியை யோகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதியுதவி

பணியின்போது திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்த மத்தூா் ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ரூ .50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், மத்தூா் ஊராட்சி ச... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே 1,057 ஆண்டுகள் பழைமையான 3 செப்பேடுகள் கண்டெடுப்பு

திருவள்ளூா் அருகே சிங்கீஸ்வரா் கோயிலில் 1,057 ஆண்டுகள் பழைமையான விஜயநகர பேரரசு காலத்திலான 3 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மே... மேலும் பார்க்க

திருவள்ளூா்: மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட... மேலும் பார்க்க

காவலா் எனக் கூறி ஓட்டுநரிடம் பணம் பறித்த நபா் கைது

மீஞ்சூா் அருகே காவலா் எனக் கூறி லாரி ஓட்டுநரிடம் ரூ.2,000 பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே 400 அடி சென்னை வெளிவட்ட சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் வழுதிகைமே... மேலும் பார்க்க

மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.திருவள்ளூா் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

சோழவரம் ஏரியை சீரமைக்கும் பணி மும்முரம்

மாதவரம்: செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியைத் தூா்வாரி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நீா்வளத் துறை அதிகாரி தெரிவித்தாா்.சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியும் ஒ... மேலும் பார்க்க