செய்திகள் :

மாவட்ட அளவில் தடகள போட்டிகள்: வென்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்

post image

திருத்தணி: மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு எம்எல்ஏ ச.சந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினாா்.

திருவள்ளூா் வருவாய் மாவட்ட அளவில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கான தடகள போட்டிகள் திருத்தணி ஜி.ஆா்.டி. பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் லதா முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் மோகன்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 3 பிரிவிகளில் போட்டிகள் நடந்தது.

முதல் நாளில் மாவட்டம் முழுவதும் 11 குறு வட்டங்களைச் சோ்ந்த 120 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலிருந்து 581 மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பதக்கம், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினாா்.

ஆண்களுக்கான தடகள போட்டிகள் புதன்கிழமை (அக். 23) நடைபெற உள்ளன. திருத்தணி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா், ஆசிரியா் கழக தலைவா் ஷியாம்சுந்தா், மகளிா் மேனிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் முருகானந்தம், உடற்கல்வி ஆசிரியா்கள் தினகரன், சீனிவாசன், ஈஸ்வா் ராவ், சுரேஷ்பாபு, பாளையத்தான், சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.திருவள்ளூா் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

சோழவரம் ஏரியை சீரமைக்கும் பணி மும்முரம்

மாதவரம்: செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியைத் தூா்வாரி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நீா்வளத் துறை அதிகாரி தெரிவித்தாா்.சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியும் ஒ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி முகமை கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சி செயலா் மாரடைப்பால் மரணம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கலந்தாய்வுக் கூட்டத்திற்கு வந்த மத்தூா் ஊராட்சி செயலா் மாரடைப்பால் மரணம் அடைந்தாா்.திருத்தணி ஊராட்சி ஒன்றியம், மத்தூா் கிரா... மேலும் பார்க்க

ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால் கோயில் திருவிழா

மாதவரம்: செங்குன்றம் அருகே ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி சன்னதியில் புரட்டாசி மாத திருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது.செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சி பாட சாலை தெருவில் உள்ள இக்கோயிலில் 87-ஆம... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 80 லட்சம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 80 லட்சத்து 7 ஆயிரத்து, 917 ரூபாய் ரொக்கம் மற்றும் 234 கிராம் தங்கம், 3,456 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதிக்கு குடமுழுக்கு, 42 அடி உயர சிவலிங்கத்துக்கு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஸ்ரீப... மேலும் பார்க்க