செய்திகள் :

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

post image

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையிலான உயரதிகாரக் குழு, லடாக் பகுதியிலிருந்து வந்துள்ள போராட்டக் குழுவுடன் டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வழிவகுக்குமென மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் இன்று (அக். 21) முடிவுக்கு வந்துள்ளது.

லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் மேம்பாட்டுக்காக, அரசமைப்பு ரீதியாக லடாக் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி, சோனம் வாங்சுக்கும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 25 பேரும் புதுதில்லியில் கடந்த 16 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் குழுவினா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உயா்நிலைத் தலைவா்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி கோரி வந்தனர்.

இதற்காக, இந்தியாவின் வட எல்லையில் அமைந்துள்ள மலைப்பிரதேசமன லடாக்கின் ‘லே’ பகுதியிலிருந்து தில்லிக்கு பேரணியாக வந்த வாங்சுக் மற்றும் அவரது ஆதரவாளா்கள் செப்டம்பா் 30 அன்று சிங்கு எல்லையில் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். அதன் பிறகு, அக்டோபா் 2 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், தனக்கெதிரான கைது நடவடிக்கைக்கு பின், கடந்த 5-ஆம் தேதி முதல் லடாக் பவன் பகுதியில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க