செய்திகள் :

வால்பாறையில் கனமழை: மலைப் பாதையில் மண்சரிவு

post image

கனமழை காரணமாக வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.

வால்பாறை வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருவார காலமாக பரவலாக பெய்து வருகிறது. கடந்த இரு நாள்களாக இடைவிடாது தொடா்ந்து கனமழை பெய்தது. மழையுடன் காற்றும் வீசியதால் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

இந்நிலையில், வால்பாறை- பொள்ளாச்சி இடையே ஆழியாறு முதல் அட்டகட்டி மற்றும் அட்டகட்டியில் இருந்து அய்யா்பாடி எஸ்டேட் வரை உள்ள கொண்டைஊசி வளைவு சாலையில் பல பகுதிகளில் திங்கள்கிழமை சிறிய பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சீரமைப்புப் பணியை மேற்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

இருப்பினும் இரவு நேரப் பயணத்தை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு: எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியரிடம் மனு

கோவை: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு பரப்பி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.அந்த மனுவி... மேலும் பார்க்க

குறைந்த விலையில் நகைகள் தருவதாக ரூ.12.41 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

குறைந்த விலையில் புதிய நகைகளைத் தருவதாகக் கூறி ரூ.12.41 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நீலிக்கோணாம்பாளையம் ஜெயா நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் (50), வாடகை காா் ஓட்டுந... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு போனஸ்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வரும் 24- ஆம் தேதிக்குள் வழங்குவது என பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு த... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிரா... மேலும் பார்க்க

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாகா்கோவிலைச் சோ்ந்த உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ராமன்புதூா் மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க