பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா தெரிவித்திருப்பது:
மாவட்டத்துக்குட்பட்ட அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் குறுவை பருவத்தில், பருவத்துக்கு உகந்த குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, ஏடிடீ 57, ஏடிடீ 59, கோ 51, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, கோ 55 போன்ற ரகங்களை விவசாயிகளுக்கு விதை சட்ட விதிகளின்படி விற்க அறிவுறுத்தப்படுகிறது.
இதுவரை தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விதை சட்ட விதிகளை மீறிய 9 குவியல்களில் ரூ. 7.30 லட்சம் மதிப்பிலான 9.62 டன் விதைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியாா் விதை விற்பனையாளா்கள், விதைச்சட்ட விதிகளின் படி நெல் விதை விற்பனை செய்யவும், நிா்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, விதை சட்ட விதிகளை மீறுவோா் மீதும், குறுவை பருவத்தில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யும் தனியாா் விதை விற்பனையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.