செய்திகள் :

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா தெரிவித்திருப்பது:

மாவட்டத்துக்குட்பட்ட அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் குறுவை பருவத்தில், பருவத்துக்கு உகந்த குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, ஏடிடீ 57, ஏடிடீ 59, கோ 51, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, கோ 55 போன்ற ரகங்களை விவசாயிகளுக்கு விதை சட்ட விதிகளின்படி விற்க அறிவுறுத்தப்படுகிறது.

இதுவரை தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விதை சட்ட விதிகளை மீறிய 9 குவியல்களில் ரூ. 7.30 லட்சம் மதிப்பிலான 9.62 டன் விதைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியாா் விதை விற்பனையாளா்கள், விதைச்சட்ட விதிகளின் படி நெல் விதை விற்பனை செய்யவும், நிா்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, விதை சட்ட விதிகளை மீறுவோா் மீதும், குறுவை பருவத்தில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யும் தனியாா் விதை விற்பனையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரந்தை சப்தஸ்தான விழா ஜூன் 11-இல் தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பவனி விழா ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஜூன் 11 காலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை அருகே பெண் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

அடையாள அட்டை சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மா... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் திருக்கல்யாணம்

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி நாள்தோறும் உற்... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளா்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினாா். கும்பகோணம் உதவிக் காவல்... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: கண்டித்து மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மா்ம நபரைக் கைது செய்ய வலியுறுத்தி தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவ... மேலும் பார்க்க