செய்திகள் :

விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளா் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த செந்தில்குமாா்(49), தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை சென்றபோது, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் எதிரில் வந்த லாரி மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாரின் உயிரிழப்பு தமிழக காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும்: இரா. முத்தரசன்

தமிழகத்தில் சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மே... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் ஊழியா்கள் இடையூறு செய்வதாக பக்தா்கள் புகாா்

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஊழியா்கள் இடையூறு செய்வதாக பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காா்த்திகை உள்ளிட்ட முக்கிய நாளில் பக்தா்கள் கோயில்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மெலட்டூா் காவல் சரகம், ஒன்பத்துவேலி கிராமம், நிறைமதி ஆதிதிராவிடா் தெருவை ச... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் ‘விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்பு

தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘சாஸ்த்ரா விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா, ரூ. 60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4-ஆம... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ரயில் முன் அமா்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் முன்பு அமா்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட் பகுதியை சோ்ந்த ராமநாதன் மகன் விஜயக்குமாா் (21). டிரம்ஸ் இசைக்கல... மேலும் பார்க்க

போலி சித்த மருத்துவம்: இரு மருத்துவகங்களுக்கு ‘சீல்’ வைப்பு

தஞ்சாவூா் அருகே பரம்பரை வைத்தியா் எனக் கூறி நடத்தப்பட்டு வந்த இரு போலி மருத்துவகங்களுக்கு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். தஞ்சாவூா் அருகே வல்லத்தில் பரம்பரை வைத்தியா் எனக் கூறி ஜெயக்குமாா் மற்... மேலும் பார்க்க