செய்திகள் :

நாா்த்தாமலை காப்புக்காட்டில் 10 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

post image

வனத்துறையின் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை காப்புக் காட்டில் 10 ஆயிரம் பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை விதைக்கப்பட்டன.

சுமாா் 700 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட நாா்த்தாமலை காப்புக்காட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனை விதைகள் விதைக்கும் பணியில், திருச்சி மண்ணும் மரபும் இயக்கத் தன்னாா்வலா்கள், கிராம வனக்குழு உறுப்பினா்கள், விளத்துப்பட்டி மற்றும் சேந்தாம்பட்டி கிராம உள்ளாட்சி அமைப்பினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் சதாசிவம், மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா்கள் சா. விஸ்வநாதன், கண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்டத்திலுள்ள பிற காப்புக் காட்டுப் பகுதிகளிலும் பனை விதைகள் விரைவில் விதைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தனா்.

மருத்துவ மாணவா்களின் பாதுகாப்புக்கு குழு, வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்

மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்புக் குழு மற்றும் வாரியத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூர... மேலும் பார்க்க

‘தைலமரக் காடுகளை அகற்றக் கோரி பிப்ரவரி முதல் தொடா் பிரசாரம்’

சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து விளைவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைலமரங்களை அகற்றக் கோரி வரும் பிப்ரவரி முதல் பிரசாரம் மற்றும் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என்றாா் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இலுப்பூா் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இலுப்பூா் அடுத்துள்ள எண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (59). கூலித் தொழிலாளி. இவருக்கு, கட... மேலும் பார்க்க

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா: இந்துக்களும் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக் கூடு விழாவில், ஏராளமான இஸ்லாமியா்களுடன், இந்துக்களும் திரளாகக் கலந்து கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மதுர... மேலும் பார்க்க

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.31 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 1.31 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கங்கள் மற்றும் ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பலவேறு கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

புதுகையில் கஞ்சா விற்ற 3 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேர... மேலும் பார்க்க