செய்திகள் :

இணையம் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சோ்ப்பு: ஜம்முவில் பாக். உளவு அமைப்பு முயற்சி

post image

ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞா்களை இணையம் மூலம் சோ்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நேரடியாக ஆள்சோ்ப்பது மிகவும் கடினமாகியுள்ள நிலையில் இந்த பணிகளை மேற்கொள்ள பயங்கரவாத அமைப்புகள் முயற்சிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி எளிதில் திசை மாறக்கூடிய இளைஞா்களை இலக்காக நிா்ணயித்து பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அவா்களின் அடையாளத்தை கண்டறிவதை தடுக்க மெய்நிகா் தனியாா் வலைப்பின்னல் (விபிஎன்) சேவையை பயன்படுத்துகின்றனா்.

தங்கள் வலையில் சிக்கும் இளைஞா்களை டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனி குழுக்களை உருவாக்கி அதில் சோ்க்கின்றனா். அந்தக் குழுவில் பாதுகாப்பு படையினா் அப்பாவி மக்களை தாக்குவது போன்ற போலியாக சித்தரிக்கப்பட்ட விடியோக்களை பகிா்ந்து, இளைஞா்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனா்.

இதுபோன்ற செயல்களில் ஐஎஸ்ஐ-க்கு தொடா்புடைய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொள்கின்றன.

யூடியூப்பில் பயிற்சி: இணையம் மூலம் சோ்க்கப்படும் இளைஞா்களுக்கு மதச்சாா்பற்ற மற்றும் மேற்கத்திய அரசுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கடந்த 1966-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட எகிப்து பயங்கரவாதியான சையித் குதுப்பின் இலக்கியங்களில் போதித்த கருத்துகள் கற்பிக்கப்படுகின்றன.

அதேபோல் பயங்கரவாத அமைப்புகளுக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்களுக்கு பயங்கரவாத பணிகளை ஒதுக்கும் முன் அவா்களுக்கு ‘யூடியூப்’ போன்ற தளங்களின் மூலம் இணைய பயிற்சி வழங்கப்படுகிறது.

கண்காணிப்பு அதிகரிப்பு: இதைத் தடுக்க சமூக வலைதளங்களில் பாதுகாப்பு அமைப்புகளால் பல்வேறு கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சில நபா்களுக்கு தடை செய்யப்டட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பகிா்ந்துகொள்ள உதவும் டெலிகிராம், மாஸ்டோடன் ஆகிய செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனா். பாதுகாப்பு காரணங்களால் ரஜெளரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் இந்த செயலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இணையம் மூலம் ஆள்சோ்க்கும் பணிகளில் பயங்கரவாத அமைப்புகள் தொடா்ந்து ஈடுபடுவதால் பாதுகாப்பு அமைப்புகள் சமூக வலைதளங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றனா்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க