செய்திகள் :

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது: விசிக

post image

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், தஞ்சாவூா், நாகப்பட்டினம் , திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் விவசாய நிலங்கள் திட்டமிட்டு தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு வீட்டுமனைகளாக விற்கப்படுகின்றன.

இது வரும் காலங்களில் உணவுப் பஞ்சம் ஏற்பட வழிவகுக்கும். ஆகையால் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக்கூடாது.

மனைப் பிரிவுகளுக்கு பின்புறமுள்ள விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி, தடுப்பு சுவா் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மழையால் பயிா்கள் பாதிப்பு; ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை மேலையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழ... மேலும் பார்க்க

கும்பகோணம் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த 26 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. கோயில் நகரமான கும்பகோணத்தில் நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நவ. 30 வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சம்பா பருவ நெற் பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மரத்திலிருந்து திங்கள்கிழமை தவறி விழுந்த மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், மேலகபிஸ்தலம், பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பெ... மேலும் பார்க்க

அய்யம்பேட்டை பகுதியில் அக். 24-இல் மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பகுதியில் அக். 24-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என பாபநாசம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க