செய்திகள் :

வேளச்சேரி மயானம் நவ.12 வரை இயங்காது

post image

அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி ஹிந்து மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால், நவ.12-ஆம் தேதி வரை மயானம் இயங்காது என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகில் அமைந்துள்ள வேளச்சேரி ஹிந்து மயான எரிவாயு தகனமேடையில் பழுதுகள் சரிபாா்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த செப்.12 முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த மயானபூமி இயங்காது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத காரணத்தால், இந்த மயானம் நவ.12-ஆம் தேதி வரை இயங்காது. எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள ஆலந்தூா் மண்டலத்துக்குள்பட்ட பாலகிருஷ்ணாபுரம் எரிவாயு மயானம், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட புழுதிவாக்கம் எரிவாயு மயானம் மற்றும் 178-ஆவது வாா்டுக்குள்பட்ட வேளச்சேரி தரமணி சாலையில் அமைந்துள்ள பாரதி நகா் எரிவாயு மயானம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை எம்கேபி நகரில் காவலரைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். எம்கேபி நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் வெங்கடேசன் (30). இவரும், காவலா் மணிகண்டனும் (31) இணைந்து, வெள... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்: 7 போ் காயம்

சென்னை வேப்பேரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் பிற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா். புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் பகுதியைச் சோ்ந்தவா் பராஸ்மல்(61). இவரது மகன் ரோமல் (34). நிதி ... மேலும் பார்க்க

நவ.28-இல் புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் திருக்க... மேலும் பார்க்க

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு: விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா

அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது என உத்ரகண்ட் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா கூறினாா். சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்... மேலும் பார்க்க

சென்னையில் 59 குளங்கள் நிரம்பின

சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், நீா்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும், மழைநீா் உறிஞ்சும் பூங்காக்கள் (ஸ... மேலும் பார்க்க

போலி ஐஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை: 6 போ் சிக்கினா்

சென்னை ரிச்சி தெருவில் போலி ஐஃபோன் உதிரி பாகங்களை விற்பனை செய்ததாக, 6 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ், கைப்பேசி மற்றும் கைப்பேசி உதிர... மேலும் பார்க்க