சேலத்தில் களைகட்டும் தீபாவளி பர்சேஸ்; புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வ...
ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்?
ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்? 2025 நவம்பர் 17-ம் நாள் மயிலாடுதுறை பெருஞ்சேரி தாருகாவனம் சித்தர் பீடத்தில் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அசுர சக்திகளை அழித்து, தர்மத்தைக் காக்க பல்வேறு சக்தி வடிவங்களை எடுக்கும் தேவிதான் சண்டிதேவி என்கின்றன புராணங்கள். இந்த தேவியைக் கொண்டாட தேவர்கள் கூடி மாபெரும் ஹோமத்தை நடத்தினார்கள். அதில் உக்கிரம் தணிந்த சண்டிதேவி தேவர்கள் வேண்டிய வரங்களை அளித்தாள்.
அதுமுதல் ஜனனமெடுத்த எந்த ஒரு மனிதரும் தனது ஆயுளில் ஒருமுறையேனும் இந்த ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பித்தால் அவர்கள் வேண்டிய வரங்கள் கிடைக்கும். அவர்களின் ஏழேழ் தலைமுறைகளும் சிறப்புற்று வாழும் என்பது வேத கால ரிஷிகளின் வாக்கு.
ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது ஒரு அதிர்வு கொண்ட மாபெரும் சக்தி மாற்றம். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்வில் அச்சமோ கவலையோ தோல்வியோ இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை.
ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமத்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். கற்பக விருட்சம் போல காமதேனு போல எல்லாவற்றையும் அலுக்காமல் கொடுக்கவல்ல சண்டிதேவியை வழிபட்டு அவள் அருளுக்கு உரியவர் ஆகுதலே மனித பிறவி எடுத்ததன் பயன் என்கின்றன புராணங்கள். அதிலும் அவளை ஹோமங்களின் வழியே ஆராதித்து வந்தால் அந்த மகாசக்தியின் பேரருளால் அனைத்து நலன்களும் வளங்களும் அதீதவேகத்தில் ஸித்திக்கும்.
ஆயுள்; அபிவிருத்தி; ஆரோக்கியம்; ஐஸ்வர்யம்; அந்தஸ்து என வேண்டியவை யாவும் உங்களுக்குக் கொடுக்கக்கூடியது இந்த ஹோமம். உங்களுக்கு மட்டுமா! உங்கள் சந்ததியான உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்கும் அரணாக இந்த ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் விளங்கும் என்பது உறுதி.
உங்கள் பிள்ளைகளின் உடல் நிலை மேம்படவும், அவர்களைப் பீடித்திருக்கும் தீய நிலைகள் விலகவும், அவர்களின் படிப்பு; வேலை; வெளிநாட்டு வாய்ப்புகள்; பதவி உயர்வு; வியாபார விருத்தி; தொழில் விருத்தி; திருமண வரம்; பிள்ளைப்பேறு; சொத்து சேரவும், ஆபத்துக்கள் விலகவும்; கடன்-வழக்குகள் தீரவும் நிச்சயம் இந்த ஹோமம் உதவும். நம்பிக்கையோடு இந்த சிறப்பான ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்! நிச்சயம் நிலையான மகிழ்ச்சி உங்களைச் சேரும்.
வசதி அதிகம் கொண்டவர்களால் மட்டுமே செய்ய முடிகிற இந்த ஹோமம் உக்கிரமானது என்பதால் இது சாந்நித்யம் மிக்க கோயில்களில் சித்தர் பீடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் வெகு சிறப்பான ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வேறெங்கும் காண முடியாத வகையில் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே ஒருவரின் தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. இங்குள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது.

இங்கு துல்லியமாகக் கணித்த ஜோதிடத்தால் பலரது பிரச்னைகளையும் தீர்த்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன.
இங்கு வந்தாலே ஒருவரின் வாழ்வு வளம் பெரும்; முன்னேற்றம் உருவாகும் என்பது பலரது நம்பிக்கை. எந்தப் பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
வேத காலத்தில் 48,000 ரிஷிகள் கூடி பல வேள்விக்கு வித்திட்ட இடம்தான் இந்த தாருகாவனம் சித்தர் பீடம். நித்ய யக்ஞ பூமியாக இருந்த இந்த புண்ணிய பூமி, அரூபமான சித்தர்களின் அருளாசியால் இன்றும் நல்ல அதிர்வுகளால் ஜொலித்து வருகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே சித்தர்களின் தவ பூமியாகவும் சிவ வழிபாட்டுத் தலமாகவும் இருந்த இந்த இடம் தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட ஆலயமாக எழும்பியுள்ளது.
வரும் 17-11-2025 கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும் மேல் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு மகாசண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. அபூர்வமான இந்த ஹோமத்தால் தீமைகள் விலகி சுபீட்சம் உருவாகும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan