செய்திகள் :

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்! எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் பரிகார வழிபாடு சங்கல்பியுங்கள்!

post image

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்! உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் பரிகாரம்! 2025 நவம்பர் 17-ம் நாள் மயிலாடுதுறை பெருஞ்சேரி தாருகாவனம் சித்தர் பீடத்தில் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஹோமங்களில் சிறந்ததும் உக்கிரமானதுமான ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் அமைதியும் வளமும் அளிக்கக் கூடியது. மேலும் வாழ்வின் அத்தனை தடைகளையும் நீக்கி, எதிர்ப்புகளை முறியடித்து, ஜாதகக் கோளாறுகள், தீவினை, திருஷ்டி, பாவங்கள், தோஷங்கள், சாபங்கள் தகற்று முன்னேற்றத்தை அளிக்கும். உடல் மற்றும் மனத்தை வளமாக்கி நேர்மறை எண்ணங்களை அளித்து ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அமைதி அளிக்கும். வளமான வாழ்க்கைக்கு இந்த ஹோமம் அவசியமாகிறது.

ஆதிபராசக்தியின் அம்சமான சண்டி தேவியை வணங்கி ஆராதிக்கும் இந்த ஹோமத்தால் தீமைகள் விலகும். நன்மைகள் சூழும். வாழ்க்கையின் சிக்கலான எந்த நிலையிலும் இந்த ஹோமம் பாதுகாப்பு கவசமாக இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்க்கு ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நல்ல தீர்வை அளிக்கும்.

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்

துர்க்கம் என்றால் பாதுகாப்பு அரண் அல்லது கோட்டை எனப்படும். துர்கைக்கு மங்கல சண்டி என்றொரு திருநாமமும் உண்டு. வசதி அதிகம் கொண்டவர்களால் மட்டுமே செய்ய முடிகிற இந்த ஹோமம் உக்கிரமானது என்பதால் இது சாந்நித்யம் மிக்க கோயில்களில் சித்தர் பீடங்களில் மட்டுமே செய்யப்படுவது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் வெகு சிறப்பான ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.

வேறெங்கும் காண முடியாத வகையில் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே ஒருவரின் தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. வேத காலத்தில் 48,000 ரிஷிகள் கூடி பல வேள்விக்கு வித்திட்ட இடம்தான் இந்த தாருகாவனம் சித்தர் பீடம். நித்ய யக்ஞ பூமியாக இருந்த இந்த புண்ணிய பூமி, அரூபமான சித்தர்களின் அருளாசியால் இன்றும் நல்ல அதிர்வுகளால் ஜொலித்து வருகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே சித்தர்களின் தவ பூமியாகவும் சிவ வழிபாட்டுத் தலமாகவும் இருந்த இந்த இடம் தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட ஆலயமாக எழும்பியுள்ளது.

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்

இங்குள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது. இங்கு துல்லியமாகக் கணித்த ஜோதிடத்தால் பலரது பிரச்னைகளையும் தீர்த்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன. இங்கு வந்தாலே ஒருவரின் வாழ்வு வளம் பெரும்; முன்னேற்றம் உருவாகும் என்பது பலரது நம்பிக்கை. எந்த பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதனால் வரும் 17-11-2025 கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும் மேல் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு மகாசண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. அபூர்வமான இந்த ஹோமத்தால் தீமைகள் விலகி சுபீட்சம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல நல்ல காரியங்களும் நடைபெறும். தோல்வி, நஷ்டம், கஷ்டம், கடன், தீராத வியாதி போன்றவை மாறி வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி புதிய இன்பம் மலரும். வளர்ச்சி, அமைதியைப் பெருக்கும் இந்த சிறப்பு மகா சண்டி சாந்தி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்கள் பிரச்னைகள் யாவும் நிச்சயம் நீங்கும்.

ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம்

தொடர்ந்து துக்கத்தில் இருப்பவர்கள், தோல்விகளால் துவண்டு போனவர்கள், திருமணம், மகப்பேறு போன்ற மங்கல காரியங்கள் நடைபெறாமல் தவிப்பவர்கள், கடன்-நோய்-எதிரிகள் தொல்லை-வழக்கு என சிக்கலில் இருப்போர் எல்லோரும் நிச்சயம் இந்த மகா சண்டி சாந்தி ஹோமத்தில் கலந்து கொண்டால் தீர்வு கிடைக்கும். இந்த ஹோமத்தால் மந்திர உருவேற்றப்பட்ட விசேஷ ரட்சை நிச்சயம் உங்களைத் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும்.

maha sandi santhi homam QR code

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம  சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஹோம  சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை  அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

``முறைகேடுகளைத் தடுக்க, கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு'' - தமிழக அரசு விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவு

தமிழகத்திலுள்ள முக்கியக் கோயில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர... மேலும் பார்க்க

காங்கேயம்: சிவன் மலையில் கடல்நீரை வைத்து வழிபாடு - ஆண்டவன் உத்தரவு காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக்கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடிப் பேழை வழிபாடு உண... மேலும் பார்க்க

தஞ்சை பெரிய கோயில் சனி பிரதோஷம்: சிறப்பு அபிஷேகம், வழிபாடு - புகைப்படத் தொகுப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயி... மேலும் பார்க்க

மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்: அதிசார குருபெயர்ச்சி பரிகாரம் - ஸ்ரீகாலபைரவ பூஜை

அக்டோபர் 18 முதல் மிதுனத்திலிருந்து கடகத்துக்குப் பெயர்கிறார் குருபகவான். இதுவே அதிசார குருபெயர்ச்சி எனப்படுகிறது. அப்போது குருபகவான் சஞ்சாரப்படி மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 5 ராசிக்காரர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: விமர்சையாகத் தொடங்கிய பெரிய கோயில் நவராத்திரி கொலு | Photo Album

தஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் ப... மேலும் பார்க்க

ஸ்ரீகாலபைரவ மகாபூஜை! தேய்பிறை அஷ்டமி நாளில் இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்!

ஸ்ரீகாலபைரவ மகாபூஜை! தேய்பிறை அஷ்டமி நாளில் இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்! 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆல... மேலும் பார்க்க