செய்திகள் :

போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்கள்! - என்ன சிக்கல்?

post image

பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா பதவிக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஜனதா கட்சியின் தலைவர் நவ்நீத் சதுர்வேதிவ். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டார்.

இவரின் முதல் வேட்புமனுவில் 10 ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-கள் அவருக்கு ஆதரவளிப்பதாக பெயர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ-க்களின் கையொப்பம் இல்லை என தேர்தல் ஆணையம் அந்த வேட்புமனுவை நிராகரித்துவிட்டது.

நவ்நீத் சதுர்வேதி
நவ்நீத் சதுர்வேதி

அதைத் தொடர்ந்து இரண்டாவதாக ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் பெயர் குறிப்பிடப்பட்ட 10 வேட்பாளர்களின் கையொப்பம் இருந்தது.

இதற்கிடையில், வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்ட 10 எம்.எல்.ஏ-களும் பஞ்சாபின் பல்வேறு பகுதி காவல் நிலையத்தில், 'வேட்புமனுவில் இருப்பது எங்கள் கையெழுத்து அல்ல, எங்கள் கையெழுத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது' எனப் புகாரளித்தனர்.

அதன் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை நவ்நீத் சதுர்வேதியைக் கைது செய்ய சண்டிகர் வந்திருக்கிறது.

அதேநேரம் நவ்நீத் சதுர்வேதி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சண்டிகர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

எனவே, அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை சண்டிகர் காவல்துறை ஏற்றுக்கொண்டது. அதனால், பஞ்சாப் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கு அனுமதியளிக்கவில்லை.

இந்த நிலையில், சண்டிகர் காவல் நிலையத்தின் வாசலில் பஞ்சாப் காவல்துறையின் 200 காவலர்கள் காத்திருக்கின்றனர்.

நவ்நீத் சதுர்வேதி
நவ்நீத் சதுர்வேதி

நவ்நீத் சதுர்வேதி காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில், நவ்நீத் சதுர்வேதி வழக்கறிஞர்கள் முன்ஜாமீன் கோரியும், பஞ்சாப் காவல்துறை அவரைக் கடத்திச் செல்ல முயல்வதாகவும், மாநிலங்களவைக்கான அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி; மனைவி மூலம் ரூ.300 கோடி சம்பாதித்த மும்பை மாநகராட்சி கமிஷனர்

மும்பை அருகில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியில் கமிஷனராக இருந்தவர் அனில் பவார். தனது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியத... மேலும் பார்க்க

விழுப்புரம்: பச்சிளம் ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அழுத்தி கொடூரக் கொலை - தாயை தேடும் போலீஸ்

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதேபோல அங்கு இயங்கும் பிரசவ வார்டில் சுமார் 100... மேலும் பார்க்க

மதுரை: 10-ஆம் வகுப்பு படித்து வந்த துப்பாக்கிச் சுடும் வீரர் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

மதுரைமாநகர எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் - கிருத்திகா தம்பதியின் மூத்த மகன் யுவநவநீதன், தனியார்ப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்... மேலும் பார்க்க

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) ம... மேலும் பார்க்க