செய்திகள் :

மதுரை: 10-ஆம் வகுப்பு படித்து வந்த துப்பாக்கிச் சுடும் வீரர் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

post image

மதுரை மாநகர எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் - கிருத்திகா தம்பதியின் மூத்த மகன் யுவநவநீதன், தனியார்ப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

சிறுவயதிலிருந்தே துப்பாக்கிச் சுடுதலில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களைப் பெற்று வந்துள்ள யுவநவநீதன், மதுரை ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

சமீபத்தில் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகிய நிலையில் கடந்த சில நாட்களாகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

யுவ நவநீதன்
யுவ நவநீதன்

இந்த நிலையில் கடந்த வாரம் பயிற்சி முடித்துவிட்டு பயிற்சிக்கான 'ஏர் கன்னை' வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.

நேற்று பெற்றோர் கோயிலுக்குச் சென்றுவிட்டதால் யுவ நவநீதன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தாயார் வீட்டிற்குத் திரும்பி வந்து படுத்தபடி இருந்த நவநீதனை அருகே சென்று பார்த்தபோது மூச்சின்றி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் கிடந்த ஏர் கன் மூலம் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து புதூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து யுவ நவநீதனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வந்த யுவ நவநீதன் உயிரிழந்த சம்பவம் பெற்றோரையும், சக வீரர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி; மனைவி மூலம் ரூ.300 கோடி சம்பாதித்த மும்பை மாநகராட்சி கமிஷனர்

மும்பை அருகில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியில் கமிஷனராக இருந்தவர் அனில் பவார். தனது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியத... மேலும் பார்க்க

விழுப்புரம்: பச்சிளம் ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அழுத்தி கொடூரக் கொலை - தாயை தேடும் போலீஸ்

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதேபோல அங்கு இயங்கும் பிரசவ வார்டில் சுமார் 100... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்... மேலும் பார்க்க

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) ம... மேலும் பார்க்க

இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இ... மேலும் பார்க்க

Cyber Crime: பேஸ்புக் காதலி சொன்ன ஆசை வார்த்தை; 74 வயது முதியவர் ரூ. 3 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் வசிக்கும் 74 வயது முதியவர் ஒருவர் ஃபேஸ்புக் காதலி சொன்ன ஆலோசனையைக் கேட்டு ரூ.3.7 கோடியை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 74 வயது முதியவருக்கு ஃபேஸ்புக் மூலம் திவ்யா சர்மா என்ற பெண்ணின் அறிம... மேலும் பார்க்க