செய்திகள் :

விழுப்புரம்: பச்சிளம் ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அழுத்தி கொடூரக் கொலை - தாயை தேடும் போலீஸ்

post image

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

அதேபோல அங்கு இயங்கும் பிரசவ வார்டில் சுமார் 100 பேர் உள் சிகிச்சைப் பிரிவிலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளிப்புற சிகிச்சைக்கும் வந்து செல்வார்கள். நேற்று காலை அந்த வார்டை சுத்தம் செய்த துப்புரவுப் பணியாளர் பத்மாவதி என்பவர், அதன்பிறகு கழிவறையை சுத்தம் செய்வதற்காக சென்றார்.

அப்போது அங்கிருந்த ஒரு இந்தியக் கழிவறை முழுவதும் இரத்தம் சிதறியிருந்தததையும், கழிவறைக் கோப்பைக்குள் தலை அழுத்தப்பட்டு, கால்கள் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நிலையில் பச்சிளம் குழந்தை கிடந்ததையும் பார்த்து அதிர்ந்து போனார்.

விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை

அதையடுத்து அவர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததும், மருத்துவ அதிகாரி ரவிக்குமார் அவர்கள் விக்கிரவாண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்தக் குழந்தையின் தாய் யார், எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல மருத்துவமனையின் நுழைவு வாயில் மற்றும் பிரசவ வார்டின் வெளிப்புறத்தில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத ஆண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அதிர்ந்து நிற்கிறது மருத்துவக் கல்லூரி நிர்வாகம்.

போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி; மனைவி மூலம் ரூ.300 கோடி சம்பாதித்த மும்பை மாநகராட்சி கமிஷனர்

மும்பை அருகில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியில் கமிஷனராக இருந்தவர் அனில் பவார். தனது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியத... மேலும் பார்க்க

மதுரை: 10-ஆம் வகுப்பு படித்து வந்த துப்பாக்கிச் சுடும் வீரர் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

மதுரைமாநகர எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் - கிருத்திகா தம்பதியின் மூத்த மகன் யுவநவநீதன், தனியார்ப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்... மேலும் பார்க்க

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) ம... மேலும் பார்க்க

இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இ... மேலும் பார்க்க