செய்திகள் :

டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

post image

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது.

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்?

குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதை பொறுத்து, சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்பின் அதிரடிகள்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் பிற நாட்டு மக்கள் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் விசா நடைமுறைகளிலும் கடும் கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக, சமீபத்தில் வெளியான லண்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, அமெரிக்காவின் பாஸ்போர்ட் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

12-வதுஇடம்

பொதுவாக, அமெரிக்கா பாஸ்போர்ட் முதல் 10 இடங்களில் இருக்கும். ஆனால், தற்போதைய சூழல் காரணமாக, அது 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் 10 இடங்களில் இருந்து அமெரிக்கா பாஸ்போர்ட் இறங்குவது இதுவே முதல்குறை.

முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள்

இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தைத் தென் கொரியா,

மூன்றாவது இடத்தை ஜப்பான்,

நான்காவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து,

ஐந்தாவது இடத்தை ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து பிடித்துள்ளது.

ஆந்திராவில் Google AI Hub திட்டம்; "ஆனால் நம்ம முதல்வர் இந்தியைத் தடை செய்ய முயல்கிறார்" - அண்ணாமலை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் ... மேலும் பார்க்க

`உங்கள் மீது வரி விதிப்பேன்' - பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? - என்ன நடக்கிறது?

அமெரிக்க கருவூல அலுவலகத்தின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருகின்றன. இது கடந்த ஆண்டு ஜூலை... மேலும் பார்க்க

`பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள் என்கிறார்!’- சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்த அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு அருவருக்கத்தக்க ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் ... மேலும் பார்க்க

மும்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; உணவு, தண்ணீர் இல்லாமல் 12 மணி நேரம் சிக்கிய 500 மாணவர்கள்

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: "முரணான தகவல்கள், திட்டமிட்டு செய்திருக்கின்றனர்" - பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக சட்ட மன்றத்தில் இன்று பிறவிவாதங்களை ஒதுக்கி கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டாலும் எடப்ப... மேலும் பார்க்க

சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.15) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் அசம்பாவிதம் தொடர்பாக விளக்கம் அளித்தார். கூட்டத்தொடர் முடிந்தபிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செ... மேலும் பார்க்க