செய்திகள் :

போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

post image

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அதனால், சிறுமியின் தாயார் இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையை கவனித்துக்கொள்வதற்காக சிறுமி அத்தையுடன் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

இதற்கிடையில், சிறுமியின் அத்தைக்கு இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ கந்தனுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஶ்ரீ கந்தனுக்கு சிறுமியை அறிமுகப்படுத்தி, அவருடன் இரவு தங்குவதற்கு வற்புறுத்தியிருக்கிறார்.

சிறுமி மறுத்தபோதெல்லாம், பரிசுப் பொருள்களைக் கொடுத்திருக்கிறார். 2022 முதல் 2023 வரை ECR-ல் உள்ள ஸ்ரீ கந்தனின் பங்களாவில் இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை நடந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், சிறுமியின் சொத்து விவகாரம் தொடர்பாக சிறுமிக்கும், அவரின் அத்தைக்கும் வாக்குவாதம் எழுந்தபோது, ஶ்ரீ கந்தனுடன் சிறுமி இருந்த வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அத்தை மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், பாட்டியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த சிறுமியின் தாயாரிடம் நடந்தவைகளைத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் ஶ்ரீ கந்தன் மீதும், சிறுமியின் அத்தை மீதும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கும் முன்பும் ஶ்ரீ கந்தன் மீது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது வருங்கால மனைவியை கடத்தி மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி; மனைவி மூலம் ரூ.300 கோடி சம்பாதித்த மும்பை மாநகராட்சி கமிஷனர்

மும்பை அருகில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியில் கமிஷனராக இருந்தவர் அனில் பவார். தனது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியத... மேலும் பார்க்க

விழுப்புரம்: பச்சிளம் ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அழுத்தி கொடூரக் கொலை - தாயை தேடும் போலீஸ்

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதேபோல அங்கு இயங்கும் பிரசவ வார்டில் சுமார் 100... மேலும் பார்க்க

மதுரை: 10-ஆம் வகுப்பு படித்து வந்த துப்பாக்கிச் சுடும் வீரர் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

மதுரைமாநகர எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் - கிருத்திகா தம்பதியின் மூத்த மகன் யுவநவநீதன், தனியார்ப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்... மேலும் பார்க்க

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) ம... மேலும் பார்க்க

இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இ... மேலும் பார்க்க