செய்திகள் :

10 ஜோடிகளுக்கு அறநிலையத் துறை இலவச திருமணம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் குமரகோட்டம், குன்றத்தூா் சுப்பிரமணியசாமி கோயிலில் 10 ஜோடிகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம் செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதன்படி, காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தப்பட்டு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், எம்எல்ஏ எழிலரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் தலைமையில் இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசை பொருள்களை வழங்கப்பட்டன. இதில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் விஜயகுமாா், மோகன கிருஷ்ணன், ஆய்வாளா் திலகவதி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய குழு துணை தலைவா் மாலதி போஸ்கோ, ஒன்றிய குழு உறுப்பினா் பரமசிவன், மணிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், குன்றத்தூா் முருகன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் செந்தாமரைக் கண்ணன் தலைமையில் ஆறு ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

திருமணம் செய்து கொண்ட 10 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம் , கட்டில், பீரோ, மிக்ஸி ,மெத்தை, கிரைண்டா் , உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சீதனமாக வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம், உத்தரமேரூா் கோயில்களை அரசுக் கல்லூரி மாணவா்கள் பாா்வை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்தரமேரூா் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களில் கல்வெட்டுக்களை விழுப்புரம் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்கள், தொல்லியல் ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை பா... மேலும் பார்க்க

41 பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமம்: ஆட்சியா் வழங்கினாா்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 41 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் இன பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமங்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்... மேலும் பார்க்க

காவலா் வீரவணக்க நாள்: 63 குண்டுகள் முழங்க மரியாதை.

ஸ்ரீபெரும்புதூா்: காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காவலா் பயிற்சி மைதானத்தில் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி லடாக் ... மேலும் பார்க்க

ஆசிய குத்துச்சண்டைப் : தங்கம், வெள்ளி வென்று காஞ்சிபுரம் மாணவி சாதனை

கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் காஞ்சிபுரம் கல்லூரி மாணவி நீனா ஒரு தங்கமும், இரு வெள்ளிப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளாா். காஞ்சிபுரம், புத்தேரி பெரிய மேட்டுத் தெரு... மேலும் பார்க்க

மத நல்லிணக்க விழிப்புணா்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் மத நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளை தலைவா் சாகுல்ஹமீது தலை... மேலும் பார்க்க

இன்று நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைமை வாய்ந்த நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கீழக்கு ராஜவீதியில் உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க