செய்திகள் :

2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்; காவலரான கணவரிடம் விசாரணை - சேலத்தில் சோகம்!

post image

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (வயது 38). இவரது மனைவி பெயர் சங்கீதா (வயது 22). இவர்களுக்கு தர்ஷினி (வயது 4), ரோகித் (வயது 8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரோகித் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷினி எல்.கே.ஜி படித்து வந்தார்.

கோவிந்தராஜ் அவரது மனைவி குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சில நாள்களாக கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சங்கீதா அவரது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மரணம்

இதனையறிந்த அருகில் வசிப்பவர்கள் உடனே கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸார் விரைந்து வந்து மூன்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேர் இறந்ததால் கொண்டலாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் முரளியிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்குமாறு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தலைமைக் காவலர் கோவிந்தராஜ் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அவரை கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீஸார் அழைத்து சென்று தற்போது கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். சங்கீதா இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இது தவிர சங்கீதாவின் தந்தை, கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மீது புகார் செய்துள்ளார்.

சேலம்

குடும்பத் தகராறு காரணமாகத்தான் தனது மகள் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் தலைமைக் காவலர் கோவிந்தராஜிடம் விசாரிக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார். இதனையடுத்து தற்போது கோவிந்தராஜிடம் விசாரணை நடக்கிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க

ஹோட்டலில் வேலைசெய்த சிறுவர்கள்மீது தாக்குதல்; அறைக்குள் அடைத்த உரிமையாளர் கைது! - என்ன நடந்தது?

சென்னை மேற்கு கே.கே.நகர், ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர், கே.கே.நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த ஆற... மேலும் பார்க்க

`ஆபரேஷன் அகழி' : சாவி தர மறுப்பு; கிரேன் மூலம் லாக்கரையே தூக்கிய போலீஸ் - திருச்சியில் நடந்தது என்ன?

ஆபரேஷன் அகழிதிருச்சி மாவட்ட போலீஸாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி, திருச்சி மா... மேலும் பார்க்க