செய்திகள் :

2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?

post image

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இதையும் படிக்க: ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!

பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?

முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்று விளையாடினார்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு விராட் கோலி முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். அவர் நன்றாக பயிற்சியில் ஈடுபட்டார். பிளேயிங் லெவனில் யார் இருக்கப் போகிறார்கள் என்பதை என்னால் கூற முடியாது. பிளேயிங் லெவனை கேப்டனும், தலைமைப் பயிற்சியாளரும்தான் தேர்வு செய்ய வேண்டும். அதனால், பிளேயிங் லெவன் குறித்து என்னால் பதிலளிக்க முடியாது என்றார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்கினார். அவர் அறிமுகப் போட்டியில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலிக்குப் பதிலாக முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடியாக 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடும் பட்சத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இவர்கள் இருவரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் போகலாம்.

இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வேவுக்கு 292 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஜிம்பாப்வே அணிக்கு 292 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (பிப்ர... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்கு!

முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கட்டாக் வந்தடைந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்ட... மேலும் பார்க்க

3ஆம் நாள் முடிவு: 8 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை!

காலேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. அடுத்து விளையாடிய ஆஸி. 414 ரன்களுக்... மேலும் பார்க்க

ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

7,222 ரன்களுடன் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்..! மரியாதை செய்த ஆஸி. அணி!

இலங்கை வீரர் திமுத் கருணரத்னே தனது கடைசி டெஸ்ட்டில் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அன... மேலும் பார்க்க