பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்
4வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! நிஃப்டியில் கரோனாவுக்கு பிறகு பெரும் வீழ்ச்சி!
இந்திய பங்குச் சந்தை வணிகம் 4வது நாளாக இன்றும் (அக். 24) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சற்று சரிவுடனேயே முடிந்தது.
நிஃப்டி 50-ல் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5% சரிவு ஏற்பட்டுள்ளது. இது கரோனா காலகட்டத்துக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது வல்லுநர்களால் கருதப்படுகிறது.
இன்றைய வணிகத்தில் பார்மா, நிதித் துறை நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.