Dies Irae Review: மிரட்டும் மேக்கிங்; திகிலூட்டும் பேய்; ஆனா அது மட்டுமல்ல! இந்த...
Bahubali: ``ரூ.120 கோடி பட்ஜெட்; மற்றொரு கோணத்தில் உருவாகும் பாகுபலி" - இயக்குநர் ராஜமௌலி அறிவிப்பு!
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் பாகுபலி.
இரண்டு பாகங்காளாக வெளியான இந்தப் படம் 'பாகுபலி: 'தி எபிக்' என திருத்தப்பட்ட ஒரே பாகமாக இன்று (31-ம் தேதி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
பாகுபலி; தி எபிக் அறிவிப்பு வெளியானதிலிருந்து பாகுபலியின் மூன்றாவது பாகம் வெளியாகவிருக்கிறது என்ற வதந்தி பரவி வந்தது.

இந்த நிலையில், பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகியோருடன் இயக்குநர் ராஜமௌலி தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஒரு நேர்காணல் அளித்திருந்தார்.
அதில், ``‘பாகுபலி: தி எடர்னல் வார்’ என்ற அனிமேசன் படத்தின் டீசர் வெளியிட்டிருக்கிறோம். இது பாகுபலியின் 3-வது பாகமல்ல. இது பாகுபலி உலகின் தொடர்ச்சி.
இது ஒரு அனிமேஷன் படம். அமேசானில் 2D அனிமேஷனை வெளியிட்டோம். ஆனால், இது 3D அனிமேஷனாக படமாக வெளியாகும். திறமையான அனிமேஷன் இயக்குனர் இஷான் சுக்லா என்னைச் சந்தித்தார்.
அவர் பாகுபலி கதையை வேறொரு கோணத்தில் பார்க்கும் யோசனையை கொண்டு வந்தார். அந்த யோசனை எனக்கு பிடித்திருந்தது.
அதனால் அதே கதாபாத்திரங்கள், ஆனால் வேறு ஒரு கோணத்தில் பாகுபலி: தி எடர்னல் வார் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்.

இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.120 கோடி" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய ராஜமௌலி, ``ரூ.120 கோடி என்பது பாகுபலி முதல் பாகத்தின் பட்ஜெட்.
'பாகுபலி பகுதி 1' படத்தின் ஆரம்ப பட்ஜெட்டைப் போலவே, அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்திய அனிமேஷன் படமாக இது இருக்கும். இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருந்தால் அது வெற்றிப்பெற்றுவிடும்." எனக் குறிப்பிட்டார்.



















