செய்திகள் :

Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

post image
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் நிலவுகிறது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டம்
கொண்டாட்டம்

மேலும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி உறுதியாவதைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் டெல்லி பா.ஜ.க அலுவலகத்திற்கு மோடி செல்ல இருப்பதாகவும், அங்கு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு எனது நன்றிகள். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. டெல்லியின் அனைத்து துறையின் வளர்ச்சிகளையும் பாஜக உறுதி செய்யும்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Delhi: `வெற்றி பெற்றால்தான் எதிர்காலம்' - கட்டளையிட்ட தலைமை... டெல்லி பாஜக செய்து முடித்தது எப்படி?

தணிந்த ஏக்கம்..!டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக-வின் 28 ஆண்டுக்கால காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது முறையாகவும் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்த... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தேர்தல் மாநிலம் மாறும் 39 Lakh Voters? | Delhi Erode Election Results | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* டெல்லி தேர்தல் முடிவுகள்! - Live Report From Delhi * அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கத் துணைநிலை ஆளுநர் உத்தரவு ஏன்?* வெளியேறச் சொன்ன போலீஸ்.. கடுப்பாகிக் கொந்தளித்த சீதால... மேலும் பார்க்க

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்... மேலும் பார்க்க

Samsung: 'கலவரம் பண்றோம்னு சொல்லி சஸ்பெண்ட் பண்றாங்க!'- உள்ளிருப்பு போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முறை உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சங்கம் அமைக்க போராடியவ... மேலும் பார்க்க