செய்திகள் :

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

post image
புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்.

டெல்லியை கடந்த மூன்று வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெல்லியில்  70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் அதிக கவனம் பெற்ற தொகுதி புது டெல்லி.

பர்வேஷ் வர்மா - கெஜ்ரிவால்

அந்தத் தொகுதியில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா களமிறங்கினார். சுமார் 4000 வாக்கு வித்தியாசத்தில் பர்வேஷ் வர்மா கெஜ்ரிவாலைத் தோற்கடித்து வெற்றி பெற்று இருக்கிறார். பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வராக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பர்வேஷ் வர்மா
பர்வேஷ் வர்மா

வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய    அவர், “இந்த வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் டெல்லி மக்களுக்கும் நன்றி. மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

Delhi: `வெற்றி பெற்றால்தான் எதிர்காலம்' - கட்டளையிட்ட தலைமை... டெல்லி பாஜக செய்து முடித்தது எப்படி?

தணிந்த ஏக்கம்..!டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக-வின் 28 ஆண்டுக்கால காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது முறையாகவும் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்த... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தேர்தல் மாநிலம் மாறும் 39 Lakh Voters? | Delhi Erode Election Results | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* டெல்லி தேர்தல் முடிவுகள்! - Live Report From Delhi * அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கத் துணைநிலை ஆளுநர் உத்தரவு ஏன்?* வெளியேறச் சொன்ன போலீஸ்.. கடுப்பாகிக் கொந்தளித்த சீதால... மேலும் பார்க்க

Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ... மேலும் பார்க்க

Samsung: 'கலவரம் பண்றோம்னு சொல்லி சஸ்பெண்ட் பண்றாங்க!'- உள்ளிருப்பு போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முறை உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சங்கம் அமைக்க போராடியவ... மேலும் பார்க்க