செய்திகள் :

Rain Alert : `அடுத்த 2 நாள்களுக்கு மழை எப்படி இருக்கும்?' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

post image
'கனமழை, அதி கனமழை', 'எந்ததெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் என்பவைதான் இன்றைய முக்கியச் செய்திகள்.

வட கிழக்குப் பருவமழைத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை வெள்ளத்தைப் பார்த்திடாத மாவட்டங்களான மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளில்கூட கனமழை பெய்து முக்கியச் சாலைகள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களின் வானிலை நிலவரம் இப்படி இருக்க, தலைநகர் சென்னை என்றால் சொல்லவே தேவையில்லை. சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு மழை எப்படி இருக்கும் எனபது குறித்துப் பேசியிருக்கிறார், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.

இது குறித்துப் பேசியிருக்கும் அவர், "தென் மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று உள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும். மழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்

கடந்த 24 மணிநேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்திருக்கிறது" என்றார்.

மேலும், எந்ததெந்த மாவட்டங்களில், எப்படியிருக்கும் மழை என்பது குறித்து பாலச்சந்திரன் பேசியவை இவை:

ரெட் அலர்ட் / அதி கனமழை

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (அக்டோபர் 16, 17) அதி கனமழை பெய்யும்.

கனமழை

விழுப்புரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்னாமலை, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது.

Rain Alert: வங்க கடலில் உருவாகும் அடுத்த புயல் - தமிழகத்தைப் பாதிக்குமா?

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி, வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மத்திய அந்தமான் கடல்பகுதியில் தற்போது வள... மேலும் பார்க்க

Rain Alert: பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - ரமணன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிகாரிகள் கூட்டத்தை இரு தினங்களுக்கு முன் கூட்டியிருந்தார் தலைமைச் செயலர்இந்... மேலும் பார்க்க

Rain Alert: சென்னைக்கு ஏன் மீண்டும் ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம் என்ன?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த சூழலில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

Rain Alert: ``அதிகனமழை பாதிப்பு சென்னையைத் தாக்காது; சற்று இளைப்பாறலாம்'' - வானிலை ஆர்வலர் தகவல்

சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் நகரம் இயல்புநிலையை இழந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருக்கிறது. சாலைகள், சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்... மேலும் பார்க்க

Rain Alert: தொடரும் தமிழ்நாடு கன மழை பாதிப்புகள்...| Exclusive Videos

சென்னையில் தொடரும் கனமழை: இடம்: உஸ்மான் சாலை தி.நகர்சென்னையில் தொடரும் கனமழை; முல்லை நகர் பகுதியில் படகு மூலம் பொதுமக்கள் வெளியே அழைத்து வரப்படுகின்றனர். சென்னையில் தொடரும் கனமழை போக்குவரத்து நெரிசல் ... மேலும் பார்க்க