செய்திகள் :

Scam Alert: நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்... அனுபவம் பகிர்ந்த மாலா பார்வதி!

post image

நன்றி: விகடன்இணையதளம்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகை மாலா பார்வதி. பீஷ்ம பர்வம், கோதா, டேக் ஆஃப், மாலிக், நீலதாமரா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சமீபத்தில் தான் டிஜிட்டல் கைது செய்யப்பட்டது தொடர்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மோசடி

அவரின் பதிவில், ``மதுரையில் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது என் அலைபேசி எண்ணுக்கு ஒருவர் வீடியோ கால் செய்தார். அதில் பேசியவர் தன்னை மும்பை போலிஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டார். என் ஆதார் எண்ணில் 12 மாநிலங்களில் வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், அந்த வங்கிக் கணக்குகள் மூலம் பணமோசடி நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அது தொடர்பாக விசாரிக்கவே அழைத்ததாகவும் கூறினார். எனக்கு சற்று நேரத்தில் பதற்றம் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்துக்கொண்டிருந்தது.

இது தொடர்பாக என்ன செய்வது, சட்ட ரீதியாக யாரிடம் உதவி கேட்பது என தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மும்பை குற்றப் பிரிவு போலீஸ் ஐடி கார்டை காண்பித்து, பிரகாஷ் குமார் குண்டு என்பவர் என்னை தொடர்புகொண்டு, `இந்த வழக்கிலிருந்து உங்களை சுமூகமாக வெளியேற்ற முயற்சிக்கிறோம். ஆனால், அதற்கான ஒரு தொகையை நீங்கள் வழங்க தயாரா..?

Cyber Crime

இது சட்ட சிக்கலானால், பெரும் பிரச்னையாகும் என்பது உங்களுக்கே தெரியும்... நல்ல முடிவாக கூறுங்கள்' என்பது போல பேசினார். அப்போதுதான் என் உதவியாளர், மும்பை குற்றப் பிரிவு போலீஸ் ஐடி கார்டில், அசோக தூண் சக்கரம் இருக்கும். அதில் அப்படியான எதுவும் இல்லை என்பதை கவனித்தார். உடனே இது மோசடி முயற்சி என்பதையும் அறிவுறுத்தினார். அதன்பிறகே அதிலிருந்து வெளியே வந்து புகார் அளித்தோம். எனவே, அனைவரும் கவனமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

LOAN APP-ல கடன் வாங்கலாமா? Debt Trap-ல மாட்டிக்காம இருக்க என்ன பண்ணனும்? CreditCard | Interest Rate

கடன் பயன்பாடுகள் நிதிகளுக்கு விரைவான அணுகலை வழங்குகின்றன, இது கடன் வாங்கத் தூண்டுகிறது. இருப்பினும், தொடர்வதற்கு முன் உங்கள் நிதி நிலைமையை மதிப்பிடுவது முக்கியம். அதிக வட்டி விகிதங்கள் மற்றும் மறைக்கப... மேலும் பார்க்க

கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்... சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு... உஷார் மக்களே!

ஒரு காலத்தில் சேமிப்புக்குப் பெயர் பெற்று விளங்கிய நம் நாட்டின் நிலைமை, இன்று தலைகீழாக மாறிவிட்டது. கடன் என்றாலே பயந்து ஒதுங்கியவர்கள், இன்று போட்டி போட்டு கடன்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருபக்கம்,... மேலும் பார்க்க

விழுப்புரம்: `ரேட்டிங் செய்தால் பணம்' - சைபர் க்ரைம் கும்பலிடம் ரூ.6.24 லட்சத்தை ஏமாந்த இளம்பெண்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இணைய வழியாக ரூ.6.24 லட்சத்தை மோசடி செய்த நபரை, இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.பணம் தேவை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எளிமையாக வ... மேலும் பார்க்க

`ரூ.1 கோடி முதலீடு; ரூ.28 கோடி லாபம்' - மோசடிசெய்த வங்கி மேலாளர் & டீம் - சிக்கியது எப்படி?

'ஷேர் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட், ஷேர்ஸ்...' என பங்குச்சந்தை சம்பந்தமான எந்தவொரு வார்த்தையையும் கூகுள், யூடியூப் என எதில் தேடி இருந்தாலும் போதும்...அடுத்த சில நாட்களில் நம் வாட்ஸ் அப்பில் ஷேர் மார்... மேலும் பார்க்க

Financial freedom: சென்னை, புதுச்சேரியில்... முதலீடுகளை கற்றுத் தரும் நிகழ்ச்சி.. அனுமதி இலவசம்!

நிதி சூப்பர் மார்கெட்ஒருவரை வாழ்வின் அடுத்தக் கட்டம் மற்றும் உச்சத்துக்கு கொண்டு செல்வது முதலீடுகள் ஆகும். இந்த முதலீடுகள் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுப்பவையாக இருக்க வேண்டும். மேலும் குறை... மேலும் பார்க்க