செய்திகள் :

Siragadikka aasai & Kayal: மீனாவால் தூக்கமின்றி தவிக்கும் விஜயா| கயல் திருமணத்தை நிறுத்திய தீபிகா

post image

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் (அக்டோபர் 17) ரோகிணி போட்ட பிளானில் விஜயா மண் அள்ளி போட்டுவிட்டார். போதாக்குறைக்கு மனோஜின் கடையில் ரவுடிகள் புகுந்து பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டனர். 

ரோகிணி முத்துவின் மொபைல் போனை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு பாலில் மயக்க மருந்து கலக்கிறார். அவரின் திட்டப்படி முத்து, மீனா இருவரும் பாலை குடித்துவிட்டு தூங்கிவிடுகின்றனர். மொபைல் போனை எடுக்கப் போகும் நேரத்தில் விஜயா வந்துவிடுகிறார். 

ரோகிணியிடம் இங்க என்ன பண்ற என்று கேட்க, எதையோ சொல்லி சமாளிக்கிறார். மீனா காரணம் சொல்லாமல் சிரித்த சம்பவம் விஜயாவை குழப்பிவிட்டது போலும். மீனா எதற்காக சிரித்தார் என்பதை தெரிந்து கொள்ள தீவிரமாக யோசிக்கிறார்.

சிறகடிக்க ஆசை
Siragadikka aasai

இவ்வாறு புலம்பி விட்டு விஜயா ரூமுக்கு போனதும் மீண்டும் ரோகிணி மொபைல் எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் மனோஜ் வந்து ரோகிணியிடம் காதல் வார்த்தைகள் சொல்லி அழைத்து சென்றுவிடுகிறார். ஆக மொத்தம் ரோகிணியின் பிளான் தோல்வியடைந்து விட்டது. 

அடுத்த நாள் மனோஜின் கடைக்குள் சிலர் அத்துமீறி நுழைகின்றனர். இதற்கு முன்னர் மனோஜ் பவுன்சராக ஒரு நபரை பணிக்கு அமர்த்தி, பின்னர் அந்த நபர் முத்துவிடம் அடி வாங்கிவிட்டு ஓடியிருப்பார். அந்த நபரின் உறவினர்கள் தான் தற்போது கடைக்குள் அத்துமீறி நுழைந்திருப்பர். மனோஜிடம் பணம் கேட்டு மிரட்டி, கடையில் இருந்த பொருள்களை தூக்கி சென்றுவிட்டனர். மனோஜ் செய்வதறியது அப்படியே நிற்கிறார்.

Siragadikka aasai

மீனாவின் தங்கை சீதாவை பெண் கேட்டு ஒரு குடும்பம் வருகிறது. யார் என்ன என்று சரியாக விசாரிக்காமல் மீனாவின் அம்மா ஒப்புக் கொள்கிறார். பெண் பார்க்க வீட்டுக்கு வரவழைக்க மீனாவிடம் சொல்கிறார். அதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது. ரோகிணி முத்து சிக்க வைப்பாரா? மனோஜ் இந்த நஷ்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறார்? அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியும். 

கயல் : புது பொய்யுடன் களமிறங்கும் தீபிகா

எல்லா தடைகளையும், சதிகளை மீறி ஒருவழியாக கயல் - எழில் திருமணம் நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் நிம்மதி அடைந்த சமயத்தில். வழக்கம் போல ஒரு ட்விஸ்ட். கயல் கழுத்தில் எழில் தாலி கட்டும் சமயத்தில் மண்டபத்திற்கு தீபிகா வந்து விடுகிறார். நிறுத்துங்க, எழில் என்ன ஏமாத்திட்டாரு, எழில் என்ன கர்ப்பமாக்கிட்டார் என்று புது பொய்யை சொல்கிறார். மேலும் தன்னை தானே குத்தி கொள்ள முயற்சி செய்கிறார்.

கயல்
Kayal

கயலுக்கு தீபிகா சொல்வது பொய் என்று தெரிந்த போதிலும் அவரால் எதுவும் பேச முடியாமல் நிற்கிறார். எனவே தீபிகா சொன்னது பொய் என்று திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவர் முன்னிலையிலும் நிரூபிக்க நினைக்கிறார் கயல். இதனிடையே தேங்காயில் பாம் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கயல் தீபிகா சொல்வது பொய் என நிரூபித்துவிடுகிறார். ஆனால் தேங்காயில் இருக்கும் பாம் வெடித்தால் திருமணம் நின்றுவிடும். இன்றாவது திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்! 

BB Tamil 8 Promo: `நீ செஞ்சிருக்கக் கூடாது' வில்லங்க பட்டம்; கலங்கி அழும் அன்ஷிதா

12-வது நாளான இன்றைய எபிசோடில் பல எதிர்பார்ப்புகளுக்கு பதில்கள் கிடைக்கும்.வீக்கெண்டுக்கு எபிசோடுக்கு முன்பாகவே... அதாவது விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகுவதற்கு முந்தைய நாள் அந்த வாரத்தில் நடந்த ட... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 11: `அழுகை; அழுகை; அழுகையோ அழுகை' - தர்ஷாவின் புலம்பல்; அன்ஷிதா நடித்த காதல் காட்சி

மன உளைச்சல் நேரும் சமயங்களில், பொதுவாக ஆண்களின் வெளிப்பாடு கோபமாக இருக்கும் என்றால், பெண்களின் எக்ஸ்பிரஷன் கண்ணீர் வழியாகத்தான் வெளிப்படும். எத்தனையோ நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் ... மேலும் பார்க்க

Bigg Boss Season 8: அழுத தர்ஷா; அட்வைஸ் செய்யும் விஜே விஷால் - வைரலாகும் ப்ரோமோ..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ( 11-ம் நாள்) தினத்திற்கான முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருந்த நிலையில், மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷா குப்தா, "என்னை அனைவரும் சேர... மேலும் பார்க்க

Siragadikka aasai: பாலில் மயக்க மருந்து; ரோகிணியின் திட்டம் கைக்கூடுமா?

குடும்பமாக அனைவரும் சாப்பிடும் போது மீனா அண்ணாமலையை நல்லா சாப்பிடுங்க மாமா என்கிறார். உடனே அவருக்கு தன் அம்மா நியாபகம் வந்துவிடுகிறது. முத்துவும் தன் பாட்டி உணவு பரிமாறும் விதத்தை சொல்லி நெகிழ்கிறார்.... மேலும் பார்க்க

தவறான தகவல்; நான் விஜய் கட்சியில உறுப்பினராகல;ஆனால்... - தாடி பாலாஜி

சமீபமாக நடிகர் விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிப்பவர்களைக் கொஞ்சம் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகர் தாடி பாலாஜி.தமிழக வெற்றிக் கழகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமி... மேலும் பார்க்க