செய்திகள் :

அண்ணா, எம்.ஜி.ஆரை சனி என்று விமர்சித்த சீமான்; காட்டமான டிடிவி தினகரன்; நடந்தது என்ன?

post image

விஜய் புதிய கட்சி தொடங்கும் வரை `என் தம்பி, வந்தால் சேர்ந்து பயணிப்போம்' என்றெல்லாம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று எந்தவொரு செய்தியாளர் சந்திப்பென்றாலும் விஜய்யை கடுமையாக விமர்சிக்காமல் செல்வதில்லை.

அதன் தொடர்ச்சியாக நேற்று (செப்டம்பர் 26) செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், "தி.மு.க-வில் இருந்து இரண்டு இட்லியும், அ.தி.மு.க-வில் இருந்து இரண்டு தோசை எடுத்து ஒரு உப்புமா கிண்டியிருக்கிறார்.

சீமான், விஜய்
சீமான், விஜய்

இங்க அண்ணாவையும், இங்க எம்.ஜி.ஆரையும் வைத்துக் கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது.

இது ஒரு சனியன், இது ஒரு சனியன். இரண்டு சனியனைச் சேர்த்து ஒரு சட்டை தைத்துக் கொண்டார், சனிக்கிழமை சனிக்கிழமை கிளம்பிவிட்டார். மாற்றம் என்ற சொல்லையே அவர் சொல்லவில்லையே" என்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் எதிர்வினையாற்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்,

"அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் குறித்தான சீமானின் அருவருக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. சீமானின் நாகரிகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த தலைவர்கள் மீது நாகரிகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள சீமான் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இன்று செப்டம்பர் 27) செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேச்சு குறித்து விமர்சித்த டி.டி.வி. தினகரன், "கடந்த ஓராண்டாக சீமானின் பேச்சு தடுமாற்றமாகவும், ஏதோ கோபத்தின் வெளிப்பாடாகவும்தான் தெரிகிறது.

`தம்பி விஜய், நாங்கள் ஒன்றாகச் செயல்படுவோம்' என்று பேசியவர், இன்று விஜய்யால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர் இருப்பது, விஜய் பற்றிய அவரின் பேச்சுக்களில் தெரிகிறது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களைப் பற்றி சீமான் பேசுவதைப் பார்க்கும்போது அவருடைய நாக்கில் சனி குடி கொண்டிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

இதுபோலப் பேசி தனக்கு விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார். விஜய் மீது கோபமாக இருந்தால் அவரைப் பற்றிப் பேசட்டும்.

எதற்காகப் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றிப் பேச வேண்டும்? தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை விட்டுவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது. அதற்கு எதிராகச் செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்கள் வருங்காலத்தில் பதில் சொல்வார்கள்" என்று கூறினார்.

கும்பகோணம்: செல்லாத ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம்; நவராத்திரி விழாவில் சர்ச்சை!

கும்பகோணம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். தேனுபுரீஸ்வரர் துர்க்கை அம்மன... மேலும் பார்க்க

TVK: வைரலாகும் விஜய் உருவம் பொறித்த நாணயம்; நாமக்கல்லில் திரண்ட தவெக படை | Photo Album

நாமக்கல்லில் திரண்ட தவெக படைநாமக்கல்லில் திரண்ட தவெக படைநாமக்கல்லில் திரண்ட தவெக படைநாமக்கல்லில் திரண்ட தவெக படைநாமக்கல்லில் திரண்ட தவெக படைநாமக்கல்லில் திரண்ட தவெக படைவிஜய் உருவம் பொறித்த நாணயம்விஜய்... மேலும் பார்க்க

``முதல்வர் வேட்பாளர் டிசம்பருக்குள் தெரியும்'' - பாஜக நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மூத்த பா.ஜ.க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அ.தி.மு.க எம்.பி., சி.வி. சண்முகத்தை சந்தித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. சென... மேலும் பார்க்க

கரூர்: ``செந்தில் பாலாஜி கொடுப்பதை வாங்கிக்கொண்டு, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க'' - இபிஎஸ் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிற... மேலும் பார்க்க

TVK: தொடர்ந்து 3-வது வாரமாக அரசியல் சுற்றுப்பயணம்; நாமக்கல், கரூரில் இன்று மக்களை சந்திக்கும் விஜய்!

தனி விமானத்தில் புறப்பட்ட விஜய்!விஜய் இன்று காலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு விஜய் புறப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார்.காலையில் நாமக்கல்... மேலும் பார்க்க

Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில் நெதன்யாகு

இஸ்ரேல் - பாலஸ்தீனம்இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி 251 இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்ற அடுத்த நாள் முதல், சுமார் இரண்டாண்டுகளாகப் பால... மேலும் பார்க்க