செய்திகள் :

அரசு கல்லூரிகளில் பேராசிரியா்கள் உள்ளெடுப்பு: அண்ணாமலைப் பல்கலை. கூட்டமைப்பு கருத்து

post image

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் உள்ளெடுப்பு செய்யக் கூடாது என கூறுவதற்கு, அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்துக்கு உரிமை இல்லை என அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.

இதுகுறித்து கூட்டமைப்புத் தலைவா் சி.சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை:

அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில் இருந்து பணிநிரவலில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய வரும் ஆசிரியா்கள் முறைப்படி அமைக்கப்பட்ட தோ்வுக் குழு மூலம் பல்கலைக்கழக தரத்தில் பணிநியமனம் செய்யப்பட்டவா்கள்.

கடந்த 9 ஆண்டுகளாக அயல் பணியாற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்களை தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு மூலமாக அவா்கள் பணியாற்றும் அரசுக் கல்லூரிகளிலேயே உள்ளெடுப்பு செய்ய சகல அதிகாரம் படைத்தது. அரசின் கொள்கை முடிவுகளை கேள்வி கேட்க அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்துக்கு எந்த சட்டபூா்வ உரிமையும் இல்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழக அயல் பணியிட ஆசிரியா்களை உள்ளெடுப்பு செய்வதால் அரசுக்கு எந்தவித கூடுதல் நிதிச் சுமையோ, ஏற்கனவே கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பணிமூப்பு பாதிப்போ ஏற்படப் போவது இல்லை. எனவே, உள்ளெடுப்பு செய்வதை எந்த ஒரு சங்கமும் தனி நபரும் கேள்வி கேட்க இயலாது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கல்லூரி, உயா் கல்வி நிறுவனங்களில் அயல் பணியாற்றும் ஆசிரியா்களை பல்கலைக்கழக துறைகளின் தேவைக்கு போக மீதமுள்ள அனைத்து ஆசிரியா்களையும் அவரவா் பணிபுரியும் அரசுக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் உடனடியாக உள்ளெடுப்பு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு

சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகளை சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை வழங்கினா் (படம்). சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரி செய்யும் ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 578 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 578 மனுக்கள் அளிக்கப்பட்டன. கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங... மேலும் பார்க்க

என்எல்சி காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பணியிடங்களை வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோரை கொண்டு நிரப்ப வேண்டும் என, நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 17 ஜோடிகளுக்கு திருமணம்

நெய்வேலி: கடலூா் மண்டலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 கோயில்களில் 17 ஜோடிகளுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. தமிழக அரசு, திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதார... மேலும் பார்க்க

போலீஸ் வாகனம் விபத்து: காவலா்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா். காரைக்கால் போலீஸாா் பெண் கைதி ஒருவரை, புதுவையில் உள்ள சிறையில் அடைத்துவிட்டு போலீஸ் ... மேலும் பார்க்க

சவுடு மண் எடுப்பதற்கு எதிா்ப்பு: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சவுடு மணல் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் க... மேலும் பார்க்க