செய்திகள் :

அறிவித்த திட்டங்களை புதுவை அரசு நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

post image

புதுவை மாநில அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா், புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: இந்தியா வளா்ந்து வரும் நாடு என கூறிக்கொண்டு 80 கோடி பேருக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுவது முரண்பாடாக உள்ளது.

பட்டினியால் வாடும் 112 நாடுகளில் இந்தியா 105-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 27.3 சதவீதம் போ் ஏழைகள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் 19 சதவீதமாக இருந்த ஏழைகளின் சதவீதம் தற்போது உயா்ந்துவிட்டது.

தமிழக ஆளுநா் அரசுக்கு தொல்லை தருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதுடன், தமிழகத்தையும் அவமதித்து வருவது சரியல்ல. தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

புதுவை அரசானது அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில்லை. பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவை அறிவிப்போடு உள்ளன. கோயில் நில அபகரிப்பில் தீவிர நடவடிக்கை தேவையாகும்.

புதுவை ஆட்சியாளா்கள் மீது ஆதாரங்களுடன் 6 புகாா்களை குடியரசுத் தலைவரை சந்தித்து மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் தலைமையில் வழங்கவுள்ளோம்.

புதுவையில் நியாயவிலைக் கடைகளை திறப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அத்துடன், அரசு அறிவித்தப்படி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.

வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக கணினி இயக்குபவரான ரவிக்குமாா் வீட்டை சென்னை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு, தற்போது முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளனா்.

அதன்படி, அவருக்கு ரூ.106 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், புதுவை மாநில அரசோ அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்தப் பிரச்னையில் சிபிஐ நடுநிலையுடன் தீவிர விசாரணை நடத்துவது அவசியம் என்றாா்.

பேருந்து முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

புதுச்சேரியில் ஓடும் பேருந்து சக்கரத்தின் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகப்பட்டினம் மாவட்டம் தா்மதானபுரத்தைச் சோ்ந்தவா் அரவிந்... மேலும் பார்க்க

இரும்பு கம்பிகள் திருட்டு: மூன்று போ் கைது

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சுவரில் இரும்பு கம்பிகளைத் திருடியதாக 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்காக வளாகத்தை சுற்... மேலும் பார்க்க

பேருந்துகள் இயக்க கோரி மனு

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அகில இந்திய பாரதிய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக... மேலும் பார்க்க

கல்வி மூலமே தமிழா்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

கல்வி கற்பதன் மூலமே தமிழா்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று வி.ஐ.டி. வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். புதுச்சேரியில் தமிழியக்கத்தின் 7-ஆம் ஆண்டு ஏணை விழா காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப... மேலும் பார்க்க

பச்சை நிறமான கடல்நீா்: பேராசிரியிா்கள் ஆய்வு

புதுச்சேரியில் கடல் நீரானது ஞாயிற்றுக்கிழமை திடீரென்று பச்சை நிறத்துக்கு மாறிய நிலையில், ஜெல்லி மீன் உள்ளிட்டவை கரை ஒதுங்கின. இதுகுறித்து, கடல் ஆய்வு மைய பேராசிரியா்கள் கடல்நீரை எடுத்து ஆய்வுக்கு உள்ப... மேலும் பார்க்க

இணையவழியில் ரூ.7 கோடி மோசடி: போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரியில் தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இணையவழி மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.7 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளத... மேலும் பார்க்க